Tuesday 9 January 2018

அன்னை மரியாவின் முகம் தேடுவோம்

     
       அன்னை மரியாவிடம் பக்தியும், பற்றுறுதியும் கொண்டவர்கள் தூய்மையில் நிலைத்திருந்து மறைசாட்சியாக இறந்தனர். அன்னையின் அன்பு அளவுகடந்தது. தம் மகனை நமக்காக பலியாகத்தருகின்ற அளவுக்கு ஆழமானது. எனவே அன்னையின் அன்பு இதயத்தில் நமது செவிகளை வைத்து அன்னை சொல்வதைக் கேட்போம். புனித பியோ அன்னை மரியாள்மீது மிகுந்த அன்பு கொண்டு, அதிக நேரம் அன்னை மரியாவைப் புகழ்ந்து போற்றியவர். பியோ கிறிஸ்துவின் ஐந்து காயங்களை தனதாக்கும் அளவுக்கு கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டு வாழ்ந்தவர். 

     ஒருமுறை எழுத்தாளர் ஒருவர் அவரிடம் இவ்வாறு கேட்டார்: உங்கள் வாழ்வில் அன்னை மரியின் பங்கு என்ன?. அதற்குத் தந்தை பியோ, “என்னில் செயலாற்றும் அதிசய ஆற்றலுக்கும், அருட்கொடைகளுக்கும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் அற்புத ஆற்றலுக்கும், வானதூதர்களோடு நட்புடன் உரையாடுவதற்கும் காரணம், அன்னை மரியாவின் அருட்கரம் என்மீது செயலாற்றுவதே” என்று கூறினார். அன்னை மரியின் கரம், நாம் விழுந்தால் தாங்கிப்பிடிக்கும் கரம். மனம் உடையும்போதெல்லாம் தட்டிக்கொடுக்கும் கரம். தனிமையில் ஆதரவற்று அழும்போதெல்லாம் நம் கண்ணீர் துடைக்கும் கரம். எனவே வாழ்வின் எந்நிலையிலும் அன்னையின் கரம்பற்றி புனிதராவோம்.

No comments:

Post a Comment