Thursday 27 February 2020

வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்

ஆண்டவரின் திருப்பாடுகளின்பால் ஃபிரான்சிஸ் சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்ந்தார்   'வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்' ஒரு இத்தாலிய பாடுகளின் சபையின் குருத்துவ மாணவர். மார்ச் 1, 1838 ஆம்  ஆண்டு அசிசி, திருத்தந்தையர் மாநிலத்தில் பிறந்தார். இறைவனின் பாடுகளின் சபையில் சேர்ந்தவர். தமது எதிர்கால இலட்சியங்களை விட்டுக்கொடுத்தவர். துறவு சபையின் வாழ்க்கையில் துறவு சபையின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தார். வியாகுல அன்னையின்பால்  பக்தியின் கொண்டவர்.


          ஃபிரான்சிஸ் மார்ச் 1, 1838ல் இத்தாலியின் அசிசி நகரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் "சான்டே" ஆகும். அவர் அரசு அலுவலகத்தில் உயர் பதவி வகித்தவர். இவருடைய தாயாரின் பெயர் "அக்னேஸ்" ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பதினோறாவது குழந்தை ஆவார். நான்காம் வயதில் தாயை இழந்தார். தமது குழந்தைப் பருவம்  முதல்  பக்தியில் புகழ் பெற்றார்.  தமது ஆரம்ப கல்வியை "கிறிஸ்தவ சகோதரர்களிடம்"  கற்றார். இயேசு சபையின் கல்லூரியில் லத்தீன் மொழியில் பயின்று வெற்றி பெற்றார்.

           இவர் துறவற வாழ்வில் "பாடுகளின் சபையில்" இணைந்தார். அன்னை மரியாளின் சொரூபங்களின் ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். ஃபிரான்சிஸும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அன்னை மரியாளின் ஒரு சொரூபம் இவரைத் தாண்டிச் செல்கையில், "நீ இன்னும் ஏன் இவ்வுலகில் இருக்கிறாய்" என்று ஒரு குரல் தனக்குள்ளேயே கேட்டதாக உணர்ந்தார். இச்சம்பவம் இவர் துறவற வாழ்வில் இணைய தீவிரமாக தூண்டியது. துறவற வாழ்வில் இன்னல்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றார். ஆண்டவரின் திருப்பாடுகளின்பால் ஃபிரான்சிஸ் சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்து வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி "ஓ என் அன்னையே விரைவில் வாரும்" என்று சொல்லி பெப்ரவரி 27,1862ம் உயிர்விட்டார்.