Sunday 19 July 2020

புனித ஃபிரட்ரிக்

               உண்மை வழியில் அன்பிற்கு சாட்சியாக வாழ்ந்தவர். இறைவார்த்தையை ஆர்வமுடன் கற்றவர். அறநெறி பண்புகளில் சாலச்சிறந்தவர். நற்கருணை ஆண்டவரை ஆராதனை செய்து இறையருளைப் பெற்றுக்கொண்டவர். தன்மீது பொய் குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து அன்பு செய்தவரே புனித ஃபிரட்ரிக் என்பவர். இவர் 780ஆம் ஆண்டு ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறையன்பில் வளர்ந்து வந்தார். இறையாட்சி பணி செய்ய ஆர்வம் கொண்ட ஃபிரட்ரிக் குருத்துவக் கல்வி கற்றார். உட்ரெக்ட் மறைமாவட்டத்திற்காக குருவாக அருள்பொழிவு பெற்றார். 

   
   ஃபிரட்ரிக் வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாக மக்களுக்கு கிறஸ்துவை அறிவித்தார். கிறிஸ்துவின் விழுமியங்களில் மக்கள் வளர்ந்துவர பயிற்சி அளித்தார். இவரது பணிகளை விரும்பாத மக்கள் இவருக்கு எதிராக பொய்குற்றம் சுமத்தினர். இறைவல்லமையால் துன்பங்களை துணிவுடன் தாங்கிக்கொண்டார். 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயராக அருள்பொழிவு பெற்றார். பக்தியுடன் திருப்பலி நிறைவேற்றினார். மைன்ஸில் நடந்த ஆயர் கூட்டத்தில் பற்கேற்று, இறைஞானத்தின் சொற்களைப் பேசினார். 838ஆம் ஆண்டு ஜøலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி நற்கருணை ஆராதனை நடந்தவேளையில் எதிரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.