Thursday 1 December 2022

புனித எட்மண்ட் காம்பியன் மற்றும் தோழர்கள்

    

    புனித எட்மண்ட் காம்பியன் லண்டன் நகரில் ஜனவரி 25ஆம் நாள் பிறந்தார். கத்தோலிக்க திருச்சபை மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். தோவாய் பல்கலைக்கழகத்தில் தெயவீகத்தன்மை பாடத்தில் பட்டம் பெற்றார். இயேசு சபை கல்லூரியில் 6 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1573ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1580ஆம் ஆண்டு நகை வியாபாரி வேடமிட்டு நற்செய்தி பணிக்காக இங்கிலாந்து சென்றார்.

 

    குருக்களோடு இணைந்து அருளடையாளங்கள் வழி மக்களை தூய வாழ்வுக்கு வழிகாட்டினார். நற்செய்தியையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் போதித்தார். ஆங்கலிக்கன் திருச்சபையின் உண்மைத் தன்மையை ஏற்க மறுத்ததால் 1581ஆம் ஆண்டு ஜøலை 15ஆம் நாள் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்தனர். 1581ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் எட்மண்ட் காம்பியன் மற்றும் அவரது தோழர்களையும் தலையை வெட்டி கொலை செய்தனர்.