Wednesday 22 November 2017
புனித செசிலியா
கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காக வாழ்ந்தவரே புனித செசிலியா. இவர் உரோமை நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் 2ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். சிறுவயது முதல் இறையன்பில் தன்னைக் கரைத்துக்கொண்டார். நாளும் செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார். வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருவுளப்படி வாழ இறைவனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தார்.
வேத விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. செசிலியாவைக் கைது செய்து தெர்த்துல்லியனிடம் ஒப்படைத்தார். செசிலியாவிடம் இயேசுவின் பெயரை அறிக்கையிடக்கூடாது; கிறிஸ்து இயேசுவை மறுதலிக்க வேண்டும்; உரோமை கடவுளுக்கு பலிசெலுத்தவும் உத்தரவிட்டான். செசிலியா, “நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி” என்பதை நீ தெரிந்துகொள் என்று துணிவுடன் கூறினார். இதைக்கேட்ட தெர்த்துல்லியன் கோபங்கொண்டு செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment