Friday 17 November 2017

ஹங்கேரி புனித எலிசபெத்


                    “நான் இறந்த பிறகு என்னிடமுள்ள சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுங்கள். என்னை எளிய ஆடை மட்டும் உள்ள ஏழையாக அடக்கம் செய்யுங்கள்” என்று கூறியவர். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். அரசியாக அரண்மணையில் வாழ்ந்தாலும் ஏழ்மையை கடைப்பிடித்து ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தவரே புனித ஹங்கேரி புனித எலிசபெத். ஹங்கேரியில் பிரஸ்பர்க் என்னும் இடத்தில் எலிசபெத் 1207ஆம் பிறந்தார். 


       ஹங்கேரியில் பிறந்த எலிசபெத் துருக்கியா நாட்டு முதலாம் ஹெர்மான் என்பவர் தம் மூத்த மகன் ஹெர்மான் என்பவருக்கு நான்கு வயதில் திருமண நிச்சயம் செய்தர்கள். அன்றுமுதல் துருக்கியாவில் வாழ்ந்தார்.  இறையன்பிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரத்தை வெறுத்தார். ஏழைகள்மீது அதிக கவனம் செலுத்தினார். அரண்மனைக்கு வருகின்ற மக்களுக்கு தேவையான பொன்னும் பொருளும் கொடுத்தார்.

        செபம், தவம், ஒறுத்தல்கள் வழியாக இறைவனுக்கு உகந்தவராய் மாறினார். அரண்மனையில் இளவரசர் ஹெர்மான் இவரை மதிப்புடன் வழிநடத்தினார். திருமண ஏற்பாடுகள் நடந்தத் தருணத்தில் ஹெர்மான் இறந்தார். அவரது தம்பியை திருமணம் செய்தார். எலிசபெத், கணவரின் ஆதரவோடு இரக்கச் செயல்கள் செய்தார். “என் ஆண்டவர் இயேசு முள்முடி அணிந்திருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் நகைகள்” என்றுகூறி விலையுர்ந்த ஆடை ஆபரணங்களை அகற்றினார்.


        1226ஆம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களை அரண்மனைக்கு அழைத்துவந்து உதவி செய்தார். மக்களின் நலன் கருதி மருத்துவமனை கட்டிக்கொடுத்தார். நோயளிகளை அன்புடன் கவனித்துக் கொண்டார். தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கொடுத்தார். கணவர் இறந்தப் பின் பிள்ளைகளுக்கும் ஏழைகளுக்கும் செல்வத்தை பகிர்ந்தளித்து பிரான்சிஸ் அசிசியாரின் மூன்றாம் சபையில் சேர்ந்து தவ வாழ்வை மேற்கொண்ட எலிசபெத் 1231ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி 1235ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுத்தார்.

No comments:

Post a Comment