Tuesday 21 November 2017

அன்னை மரியா, புனித பத்தாம் பத்திநாதர்

      அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். திருச்சபையில் மாற்றங்கள் ஏற்படுத்த அன்னை மரியாவின் கரம்பற்றி நடந்தார். அன்னை மரியாவின் சிந்தனைகளை, செயல்பாடுகளை தனதாக்கினார். பத்திநாதர், இயேசுவை எவ்வாறு அன்பு செய்தாரோ அவ்வாறே அன்னை மரியாவை அன்பு செய்தார். மரியாவின் துணையால் தனது இறையாட்சி பணியைச் சிறப்பான முறையில் செய்தார். 

     
வாழ்வில் சந்தித்த மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் செய்தார். திருச்சபையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தினார். தொடங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைந்தார். “செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். மரியாவுக்கு சொல்லப்படும் செபங்களிலேயே அழகானதும் வளமையானதும் செபமாலையே. அது கடவுளின் தாய் மரியாவின் உள்ளத்தை தொடும் செபம். தினமும் செபமாலை சொல்லுங்கள்” என்று கூறினார்.


        செபமாலை வழியாக இறைவனின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொண்டார். அன்னை மரியாவின் கரம்பிடித்து ஏழ்மை, கீழ்ப்படிதல், இறைபக்தி, இரக்கம் ஆகியவற்றைத் தனதாக்கி, திருச்சபையின் பணிகளைச் செம்மையாகச் செய்தார். அன்னை மரியாவின் துணையோடு, இயேசு வழியாக எல்லாம் புதுப்பிக்கத்தார். அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தார். எல்லா மக்களும் செபமாலை செபிக்கத் தூண்டினார்.

No comments:

Post a Comment