Friday 24 November 2017

அன்னை மரியா, புனித குரியாக்கோஸ்

மரியாவின் கரம் பிடித்தவர்


             புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, “அம்மா மாமரியே! உம்மில் சரணடைகின்றேன். உமது நினைவுகள் இதயத்திற்கு இன்பம் தருகின்றன. உமது திருமுன்னில் அடியேன் என்னை அர்ப்பணிக்கின்றேன். உமது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காதிருக்க வரம்தாரும்” என்று நாளும் செபித்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கார்மல் அன்னையிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்த காரணத்தினால்தான் இவர் தொடங்கிய துறவற சபைக்கு கார்மல் அன்னையின் பெயரை வைத்தார். அன்னையின் துணையோடு இறையாட்சி பணியைத் திறம்பட செய்தார். குழந்தைப்பருவம் முதல் அன்னை மரியாவிடம், “அம்மா மாமரியே! நான் தூய்மையிலும், ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த முறையில் பணி செய்து, இறைவனை மகிமைப்படுத்த வரம்தாரும்” என்று செபித்தார்.

         தனது சபை மக்களை அன்னையின் கரத்தில் ஒப்படைத்தார். நாளும் அன்னை மரியாவின் கரம்பற்றி நடந்தார். அவரிடமே இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். அன்னை மரியாவை தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தார். இறைவனின் விருப்பத்திற்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார். அன்னையின் அருளால் இறைவனையும், சகோதரர்களையும் அளவில்லாமல் அன்பு செய்தார். இறைவனின் திட்டத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். தனிப்பட்ட வாழ்விலும், சமுக வாழ்விலும், பங்குதளத்திலும் சந்தித்த சவால்களை அன்னையின் துணையுடன் வெற்றி கண்டார். இயேசுவிடம், “என் இயேசுவே! எங்களுக்கு அன்னையாக அடைக்கலமாக இருக்கின்ற மரியாவின் திருமுகத்தின் தகுதியால் எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்று செபிக்க கற்றுக்கொடுத்தார்.

No comments:

Post a Comment