Thursday 2 November 2017

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம்.
    

        இறந்த விசுவாசிகள் அனைவரையும் இன்று நாம் நினைனக்கும் நாள்திருச்சபைத்தாய் இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைகின்ற புனிதமான நாள். உயிர் வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள்உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தர்சிக்க உதவி செய்கின்ற தூய நாள்இறந்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணக பேரின்பத்தில் நுழைய வழிகாட்டும் நாள்.
 
   
     புனிதர்கள் மரித்துப்போன ஆன்மாக்களின் மீட்புக்காகக் கண்ணீரோடும், முழந்தாள்படியிட்டும், கரங்ளை விரித்துப்பிடித்தும் செபித்தனர். ஒருமுறை புனித ஜெத்துருவிடம் இயேசு கிறிஸ்து காட்சியளித்து இயேசு, மரியா, சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று செபிக்கின்றபோது ஒரு ஆன்ம உத்தரிக்கின்ற இடத்திலிருந்து விண்ணக வாழ்வுக்கு கடந்து செல்கின்றது  என்று கூறினார்.
 
     
    ஒருமுறை காவல்தூதர் ஒருவர் பவுஸ்தீனாவை உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்களைச் சந்திக்க தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு ஏராளமான ஆன்மாக்கள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வமாய் செபிக்கிறார்கள்; பலன் ஒன்றுமில்லை. இந்த ஆன்மாக்களுக்கு நம்மால் மட்டுமே உதவி செய்ய முடியும். எரியும் நெருப்பின் இடையில் சென்ற பவுஸ்தீனாவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லைஇறைவனின் அன்பும், இறைவனின் பிரசன்னமும் இல்லாமல் தவிக்கும் நிலையே உத்தரிக்கிற இடத்திலுள்ள ஆன்மாக்களின் மிகபெரிய துன்பம். இவர்களின் தாகம் இறைவனோடு இணைதல்பவுஸ்தீனா இவர்களுக்காகப் பரிகாரம் செய்து செபிக்க வேண்டுமென்று கூறி வானதூதர் மறைந்தார்.
      
      
  அன்னை மரியா அங்கு தோன்றினார். உத்தரிக்கின்ற இடத்திலுள்ள ஆன்மாக்கள் உரத்த குரல் ‘மனுக்குலத்தின் தாயே என்று அழைத்தார்கள். அன்னை அவர்களை ஆறுதல்படுத்தினார். அப்போது பவுஸ்தீனா, “எனது இரக்கம் ஆன்மாக்களின் வேதனையைக் குறைக்கும்என்ற குரல் கேட்டார். அன்று முதல் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காகச் செபிக்க தொடங்கினார்.



      இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற ஆன்மாக்கள் மண்ணக வாழ்வை விட்டுபிரிந்தாலும் விண்ணகத்தில் அவருடன் வாழ்கின்றனர்விண்ணகப்பேரின்பத்தை இழந்துபோன மக்களுக்கு உயிர் வாழ்வோரின் பரிந்துரை செபத்தால் இறந்தோர் அனைவரும் விண்ணக வாழ்வை உரிமையாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே இறந்துபோன அனைத்து விசுவாசிகளுக்காகவும் செபிப்போம்.
         

லூர்து அன்னை

            பிரான்ஸ் நாட்டில் 1858ஆம் ஆண்டு பெர்னதெத் என்ற சிறுமி, தனது தங்கை மேரி மற்றும் உறவினர் யோவான் ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார்.  அப்பகுதியில் தண்ணீர்  குகை இருந்தது. அது மசபியேல் குகை என்று அழைக்கப்பட்டது.  தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். மேரி மற்றும் யோவான் தண்ணீர்க் குகையை எளிதில் கடந்தனர். பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்க முடியாமல் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார்.
          

       அருகிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னையின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. மரியா பெர்னதெத்தைத் தன்னுடன் சேர்ந்து செபமாலை செபிக்க அழைத்தார்”. சிறிது நேரத்திற்குப் பின் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார்.  பெர்னதெத் தான் கண்ட காட்சியை வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் கூறினார்.“அம்மா! அந்த அழகான சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே இருக்க விழைகின்றேன். அவர் யார் என்று தெரியவில்லை” என்றார். தாய் “இது எல்லாம் அலகையின் தந்திரம். இனி நீ அங்கு செல்லக் கூடாது” என்றார். 

       

        மீண்டும் விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்தச் செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். திரளானோர் அவருடன் அன்னையைத் தரிசிக்கச் சென்றார்கள். பலமுறை மகிழ்ச்சியோடு காட்சியளித்த அன்னை மரியா, ஒருநாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத் “அம்மா, ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்” என்றார்.  அன்னை மரியா, “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம்மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். மற்றொரு நாள் “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப, “பாவிகள் மனம்மாற செபமாலை செபிக்கவும், தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட சபைத் தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பெர்னதெத்தின் தந்தை தன் மகள் இறையொளியால் வழி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ந்து குகைக்குச் செல்ல அனுமதித்தார்.

       பங்கு குருவானவர்,“நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்”என்றார். 1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18 முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார். அன்னை மரியிடம், “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?”  என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள், “நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்” என்று கூறி மறைந்தார். அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப் பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் பரவியதும், எல்லா திசையிலும் இருந்தும் மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கி வர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாவின்மீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார்.

           பலதரப்பட்ட மக்களையும் நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தார்கள். அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள், “பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி பிரகடனப் படுத்தியது வேறுயாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். பல நிகழ்ச்சிகளுக்குப்பின் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான், 1854, டிசம்பர் 8ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், “மரியா அமல உற்பவி” என்ற கோட்பாட்டை அறிக்கையிட்டார்

No comments:

Post a Comment