Sunday 12 November 2017
புனித ஜோசப்பாத்
“இயேசு கிறிஸ்துவே! இறைமகனே! இந்த ஏழை பாவிமேல் இரக்கம் வையும்” என்று இடைவிடாமல் செபித்தவர். நம்மை விட்டு அகன்று இருப்போருக்காக அடிக்கடி செபிக்க வேண்டும் என்றும் கூறியவர். ஆன்மாக்கள்மீது தாகம் கொண்டு மருத்துவமனை, சிறைச்சாலை, வயல்வெளிகளுக்கும் சென்று ஒப்புரவு கேட்டார். பிரிவினை சபையினரால் ஆன்மாக்களை திருடுபவர் என்று அழைக்கப்பட்டவரே புனித ஜோசப்பாத்.
தாய் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் திருச்சபையில் இணைய அரும்பாடுப்பட்டார். தனது 24ஆம் வயதில் துறவு மேற்கொண்டார். மாமிச உணவுகளை தவிர்த்தார். நோன்பிருந்து தவம் செய்து மன்றாடினார். வெறும் தரையில் படுத்து உறங்கினார். தன்னுடைய ஆன்மாவும் அயலானின் ஆன்மாவும் மீட்புபெற ஆர்வமுடன் உழைத்தார். 1609இல் குருவாக அருள்பொழிவு பெற்றார். ஏழைகள் மக்கள்மீது அளவில்லா அன்பை பொழிந்தார். இவரது அன்பின் பணிவிடைகளால் எண்ணற்ற மக்கள் திருச்சபையில் இணைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment