Saturday 18 November 2017

புனித ரோஸ் பிலிப்பைன் துசேசன்


எப்போதும் காட்சித் தியானம் செய்து மறைபணியாளராக பணி செய்தவர். இறையழைத்தலை உணர்ந்தபோது ஆண்டவரே! உம் பணிக்காக நான் செல்கிறேன் என்று கூறியவர். குழந்தைகளுக்கு நற்செய்தி அறிவித்தவர். நற்கருணை ஆண்டவரை இதயத்தில் சுமந்து இறையாட்சி பணிசெய்தவரே புனித ரோஸ் பிலிப்பைன் துசேசன். இவர் பிரான்ஸ் நாட்டில், க்ரேனோபிள் என்னும் இடத்தில் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் ஆண்டு பிறந்தார்.


        பிலிப்பைன் குழந்தையாக இருந்த தருணத்தில் அவரது பெற்றோரை சந்திக்க எண்ணற்ற மறைபணியாளர்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடமிருந்து கிறிஸ்துவை கேட்டு தெரிந்துகொண்டார். கிறிஸ்துவின்மீது தணியாத தாகம் கொண்டு இறைப்பணிக்காக துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார். பிரஞ்சு புரட்சியின் போது சுரங்களில் மறைவாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்தார். துறவற வாழ்வை தேர்ந்தெடுத்த பிலிப்பைன் 1804இல் துறவற வார்த்தைப்பாடுகள் வழியாக இறைவனுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.


       ஏழை எளிய மக்கள் மத்தியில் இறையன்பின் பணியாளராக கடந்து சென்றார். ஏழை எளிய மக்களுக்கு உதவினார். குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டினார். அனைவரின் தேவையை அறிந்து உதவினார். நற்கருணை முன்பாக பலமணி நேரம் செபிப்பதில் ஆர்வம் காட்டினார். வாழ்வுதருகின்ற நலமளிக்கின்ற இறைவார்த்தையை ஆர்வமாக அறிவித்த பிலிப்பைன் 1852ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை இரண்டாம் ஜானபால் 1988ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 3ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

No comments:

Post a Comment