Wednesday 29 November 2017

புனித ஹியுபெர்ட்


             இயேசுவுடன் உரையாடுவதில் எவ்வளவோ பேரானந்தம் என்று கூறியவர். தனது நற்பண்புகளால் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் தகுதியானவர். தனது வாழ்வின் பெரும் பகுதியை வேட்டையாடுவதில் செலவிட்டவர். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர். ஆன்மீக வாழ்வில் இறையொளி பெற்று இறையனுபவம் பெற்ற தருணத்தில் இறைவனின் அழைப்புக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். உலக நாட்டங்களைத் துறந்து குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சிபணி செய்தவரே புனித ஹியுபெர்ட்

                 

          இவர் 656ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் பிறந்தார். ஹியுபெர்ட் இளம்வயதில் பாரிஸ் சென்றார். பாரிஸ் அரசர் தியோடரிக் அரண்மணையில் தனது பணியை ஆரம்பித்தார். தனது நற்பண்புகளால் அரசரின் மனம் கவர்ந்தவர் ஆனார். அரசனோடு இணைந்து வேட்டையாட செல்வது வழக்கம். வேட்டையாடுவதில் பேரானந்தம் அடைந்தார். அரண்மணை மேயர் அனைவரையும் கொடுமைப்படுத்தினார். அவரது கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அரண்மணையிலிருந்து ஹியுபெர்ட் வெளியேறி ஹெரிஸ்டல் பகுதி அரண்மணையில் மேயராக பணி செய்தார். இத்தருணத்தில் ஃபுளோரிபான்னே என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவரது மனைவி பேறுகால வேதனையில் இறந்தார்.
         


      மனைவி இறந்தப் பின் அரண்மனை வாழ்வையும் உலக இன்பங்களையும் துறந்து தவம் மேற்கொள்ள பயணம் செய்தார். செபம் செய்வதில் ஆர்வம் கொண்டார். ஆன்மீக வாழ்வில் இறையொளி பெற்றார். இறையாட்சி பணிக்காக இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். ஆயர் லாம்பெர்ட்டைச் சந்தித்து அவர் வழியாக குருத்துவப் பணி செய்ய அழைப்பு பெற்றார். தனது செல்வங்களை விற்று ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்.       

             

         குருத்தவ வாழ்வின் வழியாக இறையாட்சிப் பணியை சிறப்பாக செய்தார். இறைவனோடு நீண்டநேரம் செபிப்பதில் ஆனந்தம் அடைந்தார். ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, “என் இயேசுவே எல்லாம் உமக்காக” என்று கூறுவார். மறையுரை வழியாக நற்செய்தியை அறிவித்தார். எண்ணற்ற மக்களை கிறிஸ்தவராக மாற்றினர். இறைவனின் திருமுன்பாக அமர்ந்து செபிப்பதில் ஆனந்தம் அடைந்தார். “இயேசுவோடு தங்கியிருப்பது எவ்வளவோ பேரானந்தம்” என்றுகூறிய ஹியுபெர்ட் 727ஆம் ஆண்டு இறந்தார். இவர் வேட்டைக்காரர், உலோகத் தொழிலாளிகள் ஆகியோரின் பாதுகாவலர்.

No comments:

Post a Comment