Sunday 5 November 2017
புனித சார்லஸ் பொரோமியோ
“என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். இறைவனுக்கு உகந்ததையே செய்வேன்” என்றுகூறிய நம்பிக்கை வீரர். இறையன்பின் சுடராக உண்மையான சமூக சீர்திருத்தவாதியாக செயல்பட்டவர். இறைவனிடம் மிகுந்த தோழமை கொண்டவர். கிறிஸ்துவுக்காகவும் திருச்சபைக்காகவும் தனது சொத்து, சுதந்திரம் அனைத்தையும் துறந்தவரே புனித சார்லஸ் பெரோமியோ. இவர் 1538ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் பிறந்தார்.
உயிருள்ள, ஆற்றல், வல்லமை தருகின்ற இறைவார்த்தையை எங்கும் போதித்தார். இவரது போதனையைக் கேட்டவர்கள் மனம்மாறி நன்மை பல செய்தார்கள். தமது வாழ்நாள் முழுவதும் நற்கருணை நாதருக்காகவும், திருச்சபைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் வாழ்ந்த சார்லஸ் 1560ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். சார்லஸ் 1584, நவம்பர் 3ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரை திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1610, நவம்பர் முதல் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் குடல் கோளாறுகள்; ஆன்மீகத் தலைவர்களின் பாதுகாவலர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment