Saturday 25 November 2017

அலெக்ஸôந்திரியா நகர் புனித கேத்தரீன்


தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தவர். இந்த உலகில் அறிவும், அழகும், செல்வமும், நற்குணமும், வல்லமையும், ஆற்றலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்று உணர்ந்துக்கொண்டவர். இவ்வுலகின் அதிபர் அரசர்களுக்கெல்லாம் அரசராகிய ஆண்டவராகிய கிறிஸ்துவை நான் திருமணம் செய்துகொள்வேன் என்றுகூறி அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவரே அலெக்ஸôந்திரியா நகர் புனித கேத்தரின்.


        கேத்தரின் 282ஆம் ஆண்டு அலெக்ஸôந்திரியாவை ஆட்சி செய்தவரின் மகளாக பிறந்தார். இவர் அழகும் அறிவும் திறமையும் மிகுந்தவர். செல்வ செழிப்பில் வாழ்ந்தாலும் தனது கன்னிமைக்கு கலங்கம் ஏற்படால் வாழ்ந்தார். இளம் வயதை நெருங்கிய தருணத்தில் இவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். தனது பெற்றோரிடம் இவ்வுலகில் மாபெரும் செல்வந்தராக இருப்பவரை திருணம் செய்துகொள்கிறேன் என்றார். இளமைப் பருவத்தில்தான் ஆண்டவராகிய அறிந்து கிறிஸ்தவராக மாறினார். இந்த உலகின் மாபெரும் செல்வந்தர் ஆண்டவராகிய இயேசு ஒருவரே என்று உணர்ந்து அவருக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்தார்.
       
      இத்தருணத்தில் மாக்செந்தியுஸ் உரோமையின் பேரரசர். இவர் கிறிஸ்தவ மக்களை கொடூரமாகத் துன்புறுத்தி, கிறிஸ்துவை மறுதலித்து சிலைகளை வழிபட கட்டயப்படுத்தினான். கேத்தரீன் இவற்றிக்கு எதிராக குரல் கொடுத்தார். மாக்செந்தியுஸ் கேத்தரீன் துணிவைக் கண்டு வியந்தான். தத்துவ ஞானிகளை அழைத்து தான் வழிபடுகின்ற கடவுளே உண்மை கடவுள் என்று விவாதித்தான். கேத்தரீன் உலகின் மிக சிறந்த ஞானிகளை கண்டு பயப்படாமல் கிறிஸ்துவே உண்மையாண கடவுள் என்று துணிவுடன் கூறினார். கேத்தரின் பேச்சைக்கேட்டு ஞானிகளில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். 

            மாக்செந்தியுஸ் தோல்வியுற்றக் காரணத்தால் கேத்தரீனை சிறையில் அடைத்தான். மாக்செந்தியுஸ் மனைவி சிறையில் கேத்தரீனை சந்தித்தப்பின் அவரும் சிறைகாவலர்களும் கிறிஸ்துவராக மாறினர். இதைக்கேள்விப்பட்ட அரசன் கேத்தரீன் அருகில் சென்று நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். அரசன் தனது விருப்பத்திற்கு இணங்காத கேத்தரீனை சித்தரவதை செய்து சக்கரத்தின் அடியில் இட்டு கொலை செய்தான். இவ்வாறு கேத்தரீன் 305ஆம் ஆண்டு கிறிதுவுக்காக இறந்தார். 

No comments:

Post a Comment