Friday 24 November 2017

புனித ஆன்ட்ரூ குங் லாக்


           உலக செல்வத்தில் ஏழையாக வாழ்ந்தாலும், இறை செல்வத்தின் மாமனிதர். ஹனோய் பகுதியில் வாழ்ந்த வேதியரிடமிருந்து கிறிஸ்தவ நம்பிக்கையை பெற்றுக்கொண்டவர். கிறிஸ்துவின் உண்மை சீடராகமாறி நற்செய்தியை வாழ்வாக்கி சான்று பகர்ந்தவர். குருத்துவ அருள்பொழிவு பெற்று அனைவரையும் மீட்க வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எடுத்துரைத்த சிறந்த மறையுரையாளராக மாறியவரே புனித ஆன்ட்ரூ குங் லாக் என்பவர்.

        ஆன்ட்ரூ குங் லாக் என்பவர் வடக்கு வியட்நாமில் 1795ஆம் ஆண்டு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் வறுமைக் காரணமாக ஹனோய் பகுதிக்கு குடியேறினர். ஹனோவில் வைத்து திருமுழுக்கு பெற்று தனது பெயரை ஆன்ரூட் என்று மாற்றினார். ஆன்ரூட் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார்.  இத்தருணத்தில் பேரரசன் மினங் மான்ங் என்பவர் கிறிஸ்த மக்களை துன்புறுத்தி கொலை செய்தான். கிறிஸ்தவ மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. ஆன்ரூட் துன்பங்களை கண்டு மனம்தளராமல் துணிவுடன் கிறிஸ்துவை அறிவிக்க குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்து 1823ஆம் ஆண்டு மார்ச்சி திங்கள் 15ஆம் குருவாக அருள்பொழிவு பெற்றார்.
    

       ஆன்ட்ரூ கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை வாழ்வாக்கி நற்சான்றுகளுடன் நற்செய்தி அறிவித்தார். இவரின் மறையுரையைக் கேட்ட மக்கள் மனம்மாறி கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். இவரது செயல்களை கேள்விப்பட்ட பேரரசன் கோபம் கொண்டு மூன்று முறை சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினான். ஆன்ரூட் கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் தாங்கிக்கொண்டார். இயேசு கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்தினால் 1839ஆம் ஆண்டுடிசம்பர் திங்கள் 21ஆம் நாள் தலை வெட்டி கொலை செய்தனர். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1988ஆம் ஆண்டு ஜøலை 19ஆம் நாள் புனிதராக உயர்த்தினார். இவர் வீடுகளுக்கு பாதுகாவலர்.


No comments:

Post a Comment