Monday 20 November 2017
அன்னை மரியா, புனித பவுஸ்தீனா
ஒருமுறை குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா தோன்றினார். அன்னை மரியாவிடம், “கன்னி மரியே! எனது தாயே! நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது உமக்குத் தெரியுமே” என்றார். அன்னை மரியா, “மகளே நீ அதிகமாகத் துன்பப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும். பயப்பட வேண்டாம். நானும் உன்னுடன் இணைந்தே துன்பப்படுகிறேன். எப்பொழுதும் உன் அருகில் ஆறுதலாய் இருப்பேன்” என்று புன்முறுவலோடு கூறி மறைந்தார். பவுஸ்தீனாவும் துன்பங்களை எதிர்கொள்ள ஆற்றலும் ஆறுதலும் பெற்றார். இத்தருணத்தில், “இயேசுவே நீரே என் அமைதி! நீரே என் ஆனந்தம்” என்று கூறினார். அந்நேரம் முதல் மூவொரு இறைவனின் பிரசன்னமும் அன்னை மரியாவின் பிரசன்னமும் உணர்ந்து வாழ்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment