Sunday 19 November 2017

புதுமைகள் செய்யும் வரம் பெற்ற புனித கிரகோரி


             மக்களை பசி பட்டினியிலிருந்து விடுவித்து நல்வழி காட்டியவர். எண்ணற்ற மக்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக மாற்றினார். நோயுற்றோரை நலமாக்கினார். செபத்தை தனது ஆயுதமாக பயன்படுத்தி சிறந்த மறையுரையாளருராக மாறினார். இவர் சிறிய ஆசியாவில் உள்ள போந்துஸ் பகுதியின் தலைநகரான நியோ செசரியாவில் 213ஆம் ஆண்டு பிறந்தார்.பெற்றோரின் வழிகாட்டுதலால் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். 
         தனது பதினான்காம் வயதில் தந்தையை இழந்தார். பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அரசராக ஏற்று கொண்டார். தன்னை இறைவனின் அடியார்களுக்கு அடியான் என்று அழைத்தார். சட்டம் பயின்று சட்டத்தில் புலமை பெற்றார். உரோமை ஆளுநரின் சட்ட ஆலோசனை குழுவில் பணியாற்றினார். உரோம் நகரில் காணப்பட்ட சீர்கேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

         ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். துறவற இல்லங்களை ஏற்படுத்தி துறவிகளுக்கு பொருளுதவி செய்தார். குருக்களின் அன்றாட வாழ்விற்கு வழிகாட்டினார். திருப்பயணிகளுக்கென மருத்துவ மனைகள் தொடங்கினார். லஞ்ச நிர்வாகத்தை குறை கூறினார். உரோமை நகரை பசி பட்டினியிலிருந்தும், போரிலிருந்தும் காப்பாற்றினார். மெய்யியல், இறையியல் திறம்பட கற்றுத்தேர்ந்தார். அறிவிலும் ஒழுக்கத்திலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார்.
         தனது 40ஆம் வயதில் செசாரியா மறைமாவட்டத்தின் ஆயராகத் திருப்பொழிவு பெற்றார். மறைமாவட்டத்தில் 17 கிறிஸ்தவர்கள்தான் இருந்தனர். தம் போதனையால் எண்ணற்றோரை கிறிஸ்தவ மறைக்கு திருப்பினார். வருங்காலத்தில் முன்னறிவிக்கும் வரம் பெற்றிருந்தார். இவருடைய கடின உழைப்பால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிறிஸ்துவின் போர் வாளாக பணியாற்றிய கிரகோரி 270ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

No comments:

Post a Comment