Sunday 19 November 2017

அன்னை மரியா, புனித ஜெர்மேன் குசேன்


         


       ஜெர்மேன் அன்னை மரியாவின்மீது அளவுகடந்த பாசமும், மிகுந்த பற்றுறுதியும் கொண்டார். ஆலயத்தில் அன்னை மரியாவின் திருசொருபம் முன்பாக மண்டியிட்டு பக்தி உருக்கத்துடன் செபிக்கின்ற காட்சியே கண்கொள்ளாக் காட்சியாகும். அன்னை மரியாவிடம் பெற்ற அன்பை தனது உடன் பிறவா சகோதர சகோதரிகளிடமும், சிறுவர் சிறுமிகளிடமும் காட்டினார். ஆதலால் சிறுபிள்ளைகள் அனைவரும் அக்கா அக்கா என்று அவளையே சுற்றி வருவார்கள்.                 


        காட்டிற்குச் சென்று ஆடுகளை மேய்க்கும் போது ஆட்டுக்கோ, அவருக்கோ எந்த ஆபத்தும் நேராதபடி மரியன்னை நிழல்போல் அமர்ந்து பாதுகாத்தார். ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் செபம் செய்வார். இரவில் அவருக்குத் துணையாக அன்னை மரியாவும் காவல் தூதரும் வருவார்கள். ஜெர்மேன் உள்ளம் அன்னையின் அருளால் நனைந்தது. அன்னை மரியா எவ்வாறு, “என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது” எனப்பாடினாரோ அவ்வாறேஜெர்மேன்  உள்ளமும் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தது.

No comments:

Post a Comment