Monday 6 November 2017
நம்பிக்கையின் மரியா
அன்னை மரியா, “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்ற வானதூதரின் வார்த்தையை ஏற்று கடவுளை முற்றிலுமாக நம்பினார். தம் வாழ்வின் இன்பங்கள், துன்பங்கள், இலட்சியங்கள், எண்ணங்கள், ஆற்றல் அனைத்தையும் இணைத்துத் தம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்தார். எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். (லூக்.1:45) புனித அகுஸ்தினார், “கன்னி நம்பினார்; கன்னி நம்பிக்கையால் கருத்தரித்தார் . உடலால் கருத்தரிக்குமுன் உள்ளத்தால் கருத்தரித்தார்” என்று அழகாகக் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment