Monday 13 November 2017

மரியா, புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா


               ஒருமுறை ஸ்தனிஸ்லாஸின் அறையில் ஓர் ஒளி தோன்றியது. ஒளியின் இடையில் அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் தோன்றினார். புன்முறுவலுடன் மரியன்னை சற்றே குனிந்து ஸ்தனிஸ்லாஸிடம் குழந்தை இயேசுவைக் கொடுத்தார்.  குழந்தை இயேசுவும் தம் கரங்களால் புனிதரைத் தழுவினார். இந்நேரத்தில் மரியன்னை ஸ்தனிஸ்லாஸிடம் இயேசு சபையில் சேருமாறு கூறினார்.


      அன்று முதல், “இயேசுவின் தாய் எனது தாய்” என்றுகூறி அவ்வாறே வாழ்ந்து வந்தார். அன்னை மரியாவின் தூண்டுதலால் தமது 17ஆம் வயதில் சாக்கு உடை அணிந்து, கால்நடையாகச் சென்று இயேசு சபையில் சேர்ந்து துறவற வாழ்வின் வழியாக புனிதராக மறினார். “அன்னையே இதோ! நான் வருகின்றேன். என்னை ஏற்றுக்கொள்ளும். உம் திருமகனிடம் என்னை ஒப்படைத்தருளும்” என்று செபமாலையை கரங்களில் பிடித்தவாறே தனது இறுதி நாட்களில் செபித்தார்.



No comments:

Post a Comment