Wednesday 29 November 2017

செபமாலை செபித்து புனிதராவோம்


           பெரிய பெரிய புனிதர்கள் உருவாக்கும் பணி உலகின் இறுதிவரை மரியன்னைக்கு முற்றிலும் உரித்தானது. ஒவ்வொரு புனிதர்களும் அன்னை துணையோடு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து புனிதர்களாக மாறினார்கள். செபமாலை செபிக்கின்றவர்களிடம் அலகை நெருங்காது. புனித ஜான்போஸ்கோ, நான் மரியாளைப் பார்க்காமல் கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். புனித அம்புரோஸ், மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும் என்று செபித்தார்.

         புனித கிறிஸ்சோஸ்தம் அருளப்பர், கடவுளின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக்கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும் என்று மன்றாடினார்.  வறியோருக்கு நம்பிக்கையின் நங்கூரம் என்கிறார் புனித லாரன்ஸ் ஜஸ்டினியன். புனித பெர்னார்து மரியா பாவிகளின் ஏணிப்படி என்கிறார். ஏனெனில் இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவ பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கும் ஏணிப்படியே அன்னை மரியா.
           ஒருமுறை புனித ஜெர்த்ரூத்துக்கு மரியன்னை ஒரு போர்வையால் ஏராளமான காட்டு விலங்குகளை உள்ளடக்கி அவற்றை அரவணைத்து அவற்றிற்குப் புகலிடம் கொடுத்ததாகத் தனக்குக் கிடைத்த காட்சியில் குறிப்பிடுகின்றார். இத்தகைய காட்சியின் மூலம் இறைமகனின் தாய் எத்தகைய பாவிகளையும் தமது  தாய்மை என்னும் போர்வைக்குள் வைத்து அரவணைத்துக் கொள்கின்றார் என்று தெளிவுப்படுத்துகிறார். எனவே நாம் நோவாவின் பேழை என்று அழைக்கப்படும் இயேசுவின் தாயின் கரங்களில் நம்மை ஒப்படைப்போம்.  

No comments:

Post a Comment