Thursday 23 November 2017

மரியா கிறிஸ்தவர்களின் சகாயம்


               புனித தொன்போஸ்கோவின் பாதுகாப்பில் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவரது தாய் துணையாக இருந்து பற்பல பணிவிடைகள் புரிந்து வந்தார். மாலையில் விவிலியக் கதைகளைக் கற்றுக்கொடுத்தார். இரவில் சிறுவர்களின் கிழிந்துபோன உடைகளைத் தையல் போட்டு சீர்ப்படுத்தினார். திடீரென அவரது தாய் இறந்துவிட்டார். அன்னையின் அரவணைப்பையும், பாதுகாப்பையும் இழந்த தொன்போஸ்கோ, அன்னை மரியாவிடம், “கன்னிமரியே, எனது பிள்ளைகளைப் பாரும். இவர்களுக்கு இனிமேல் எந்தத் தாயும் இல்லை. இந்நேரம் முதல் நீரே இவர்களுக்குத் தாயாக துணையாக இருப்பீராக”  என்று செபித்தார். அன்று முதல் அன்னை மரியாவை, ‘கிறிஸ்தவர்களின் சகாயமே’ என்று அழைத்தார். அன்னை மரியாவின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்து புனிதராக மாறினார்.

No comments:

Post a Comment