Thursday 16 November 2017

அன்னை மரியா, புனித ஜோசப் குப்பெர்டினோ


              ஜோசப் குப்பெர்டினோ, தனது துறவற வாழ்வை  அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தார். ஒவ்வொரு நாளும் அனனை மரியாவின் துணை நாடினார். தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை, நம்பிக்கை, புனிதமான சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் சிறந்து வளங்கினார். துறவற வார்த்தைப்பாடுகள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வழியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணமாக்கி உத்தமத் துறவியாக வாழ்ந்தார்.  

          இறைமாட்சிமைக்காகத் தனது வேலைகளைச் செய்தார். ஜோசப்பின் நல்ல வாழ்க்கையைப் பார்த்த சபைத் தலைவர் அருட்பணியாளராகப் பணிசெய்ய அனுமதி கொடுத்தார். ஜோசப் உயர் கல்விக்கு சென்றார். இறையியல் கற்பதில் பின்தங்கியவராகக் காணப்பட்டார். தேர்வில் தோல்வி அடைந்தார். இக்காரணத்தால் அவருக்கு மற்றொரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் மறையுரை நிகழ்த்தவேண்டும் என்பதாகும்.


          ஆலயத்தில் மறையுரை நிகழ்த்தும் முன்பாக அன்னை மரியாவிடம் உருக்கமாக வேண்டுதல் செய்தார். தூய ஆவியின் வல்லமையால் நிறைந்தார். இறைவனின் அன்பைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் மறைவல்லுநரைப் போல் எளிய நடையில் கேட்பவரின் உள்ளத்தை ஊடுருவிப்பாயும் அளவுக்கு மறையுரை நிகழ்த்தினார். இதைக் கேட்ட பலர் பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறி, இறைவனிடமும் அன்னை மரியாவிடமும் நம்பிக்கை கொண்டனர். இக்காரணத்தால் அருட்பணியாளராக 1628, மார்ச் 28ஆம் நாள் அருட்பொழிவுப் பெற்று, இறைவனுக்கு உகந்த பணியாளனாய் மாறினார். வாசிக்கத் தடுமாறிய ஜோசப், கற்றறிந்த நபர்களைவிட எதற்கும் தெளிவாக விளக்கம் அளித்ததற்கு காரணம் அனனை மரியாவின் அருளும் அன்பும்  இறைஞானமாக மாறியது.  

No comments:

Post a Comment