Tuesday 28 November 2017

புனித கேத்தரின் லாபுரே


            அன்பு அன்னை மரியே இனி நீதான் என் தாய் என்று கூறியவர். நோயளிகளை அன்பு செய்து அவர்களுக்கு பணிவிடை செய்தவர். இறைவனின் அழைப்பை ஏற்று இறைபணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர். நற்கருணை ஆண்டவரை அன்பு செய்து வாழ்ந்தவரே புனித கேத்தரின் லாபுரே. இவர் பிரான்ஸ் நாட்டில் 1806ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் பிறந்தார்.


        தாயின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தினமும் அதிகாலையில் எழுந்து ஆலயம் சென்று திருப்பலியில் பங்குகொண்டார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தினமும் தவறாமல் செபமாலை செபித்து வந்தார். குழந்தைப் பருவத்தில் தன் தாயை இழந்தார். இத்óதருணத்தில் அன்னை மரியாவை தன் தாயாகவே ஏற்றுக்கொண்டு, அன்னை மரியாவின் அரவனைப்பில் வாழ்ந்தார். 
              திருப்பலியில் பங்கேற்ற தருணத்தில் இறைவன் தனது பணிக்காக அழைப்பதை உணர்ந்து இறைவனுக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்தார். நற்செய்தியை வாழ்வின் மையமாக மாற்றினார். வாழ்வு தருகின்ற, நலமளிக்கின்ற, ஞானத்தை, அன்பை, அமைதியைத் தரக்கூடிய இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். புனித வின்சென் தே பவுல் இவரது கனவில் தோன்றி சேவையின் சகோதரிகள் துறவற சபையில் சேர அழைப்பு விடுத்தார். அவ்வாறு 1830ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் சேவையின் சகோதரிகள் சபையில் சேர்ந்தார்.

             நற்கருணை ஆண்டவரின் முன்பாக செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் இயேசுவை கண்டார். நேயாளிகளுக்காக பணிவிடைகள் செய்து முதியோர்களை அன்பு செய்தார். அன்னை மரியாவை பலமுறை நேரில் கண்டார். அன்னை மரியாவின் அன்பிற்கு சான்றாக வாழ்ந்த கேத்தரின் 1876ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் 1947ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 27ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்

No comments:

Post a Comment