Wednesday 10 January 2018

புனித தார்சிசியுஸ்

       
  

ஆண்டவரின் திருவுடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல் கிறிஸ்துவின் வல்லமையால் என்னால் முடியும் என்று கூறியவர். கிறிஸ்துவின் நற்செய்தியை மையப்படுத்தி புனிதமான வாழ்க்கை வாழ்ந்தவர். டயோக்ளியாசுக்கு அஞ்சி குகைகளிலும், சுரங்கங்களிலும் ஒளிவீசும் தீபங்களாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு நற்கருணை கொண்டு கொடுப்பவர். ஓய்வு நேரங்களில் கிறிஸ்தவ முதியோர்களிடம் சென்று மறைச்சாட்சிகளைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டவர். கிறிஸ்துவின்மீதும், நற்கருணையின்மீதும், அன்னை மரியாவின்மீதும் அளவு கடந்து அன்பும் பக்தியும் கொண்டிருந்தவரே புனித தார்சிசியுஸ். இவர் உரோமையில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தார். இத்தருணத்தில் உரோமை பேரரசர் டயோக்ளியஸின் கிறிஸ்தவ மக்களை மிகக்கொடூரமான முறையில் துன்புறுத்தினான்.  


      தார்சிசியுஸ் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட தருணத்தில் வேதவிரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தன. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. பெரும் சூறாவளிபோன்று உரோமைப்பேரரசு முழுவதும் கலகம் ஏற்பட்டது. எண்ணற்ற கிறிஸ்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இத்தருணத்தில் கிறிஸ்தவ மக்கள் மறைவாக நற்கருணை வழிபாடு நடத்தினர். சிறையில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் இறக்கும் முன்பாக நற்கருணை வழங்க திருசபை தலைவர்கள் தீர்மானித்தனர்.

        தார்சிசியுஸ் மறைமுகமாக நடைப்பெற்ற நற்கருணை வழிபாட்டில் கலந்துக்கொண்டார். நற்கருணை வழிபாடு முடிந்ததும் குருவானவர், “ஒவ்வொரு நாளும் சிறையில் துன்புறும் கிறிஸ்தவ மக்களுக்கு நற்கருணை எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு காவலர்களின் கண்களில் படாமல் நற்கருணை கொண்டு செல்ல யார் தயாராக இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். இது கேட்டவுடன் 12வயது நிரம்பிய தார்சிசியுஸ் கரம் உயர்த்தினார். குருவானவர், ஆச்சரியமும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைந்தார். தார்சிசியுஸ், “உன்னால் முடியுமா?” என்று கேட்டார். தார்சிசியுஸ் “கிறிஸ்துவின் வல்லமையால் என்னால் முடியும்” என்று உறுதியுடன் பதில் அளித்தார். குருவானவர், அவரிடம் நற்கருணையை கொடுத்து அனுப்பினார். தார்சிசியுஸ் நற்கருணையுடன் நடந்து சென்றபோது, சிறைகாவலரின் கையில் சிக்கினார். “என்ன மறைத்து எடுத்து வருகிறாய்?” என்று கேட்டார். காவலரின் வற்புறுத்தலாலின் காரணமாக தார்சிசியுஸ், நற்கருணை கொண்டு வருவதாகக் கூறினார்.


         இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத வேதவிரோதிகள், “இந்த அப்பத்தை எங்களுக்கு தா” என்று கோபத்துடன் கேட்டனர். தார்சிசியுஸ், அவர்களிடம் கொடுக்க மறுத்து நற்கருணையை தனது மார்போடு அணைத்து கொண்டார். மீண்டும் காவலர்கள் அவரை கட்டாயப்படுத்தினர். தார்ச்சியுஸ் தமது பிடியில் உறுதியாய் இருந்தார். இக்காரணத்தால் அவரை தடியால் அடித்தார்கள். தலையில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவு இழந்து கீழேவிழுந்தார். கிறிஸ்தவ படைவீரர் கீழே மயங்கி கிடந்த தார்சிசியுஸ்ûஸ தூக்கினார். அவரிடம் நற்கருணை ஒரு சிமிழில் முத்திரை வைக்கப்பட்டதை கண்டு நற்கருணை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதித்தார். ஆண்டவரின் திருவுடலை சுமந்து சென்ற தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல் என்று கருதி ஆகஸ்ட் 15ஆம் நாள் மறைச்சாட்சியாக இறந்தார்.  

No comments:

Post a Comment