Thursday 25 January 2018

மரியா நமதருகே

   
          ஓ என் இறைவனின் தாயே! பாவப்பட்ட ஒரு பாவி மீது இரங்குங்கள். தங்களின் கடைகண் பார்வை எனக்குக் கிடைக்க நான் தகுதியற்றவள். ஆனால் தாங்ககள் பாவிகளின் அடைக்கலம். அன்னை மரியா நமதருகே இருக்கவேண்டும். மரியா செபமாலை சொல்வோரின் அருகில் விரைந்து வருகின்றார். புனித பவுஸ்தீனாவுக்கு ஒருமுறை குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா தோன்றினார். பவுஸ்தீனா அன்னை மரியாவிடம், “கன்னி மரியே! எனது தாயே! நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது உமக்குத் தெரியுமே!” என்று கூறினார். 




          அன்னை மரியா பவுஸ்தீனாவிடம், “மகளே நீ அதிகமாகத் துன்பப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும் நீ பயப்பட வேண்டாம். நானும் உன்னுடன் இணைந்தே துன்பப்படுகிறேன். எப்பொழுதும் உன் அருகில் ஆறுதலாய் இருப்பேன்” என்றார். பவுஸ்தீனா செபமாலையின் வழியாக துன்பங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெற்றார். நாம் பாவத்தை வென்று தூய்மையில் முன்னேற வேண்டுமானால் செபமாலை செபிக்கவேண்டும். செபமாலை வழியாக கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தியானித்து அன்னையின் அருட்கரம் வழியாக இறையருள் பெறமுடியும்.

No comments:

Post a Comment