Saturday 20 January 2018

செபமாலை அன்னை

         
புனித அல்போன்ஸ் லிகோரி தனது வாழ்வில் சந்தித்தத் தடைகளை செபமாலை வழியாக வெற்றியின் படிக்கற்களாக மாற்றினார். ஆன்மீக வாழ்வில் இறையன்பின் உச்ச நிலைக்கு அடைந்தது செபமாலை வழியாகவே என்று கூறினார். 
வயதான நிலையில் ஒருமுறை சக்கர வண்டியில் வைத்து அவரை ஒரு சகோதரர் மடத்துக்கு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தார். 


    

  அப்போது லிகோரி அந்த சகோதரனைப் பார்த்து, ‘இன்று நீ செபமாலை செபித்தாயா?’ என்று கேட்டார்அந்த சகோதரன், ‘எனக்கு ஞாபகமில்லை’ என்று கூறினார். உடனே அல்போன்ஸ் கோரி, ‘அப்படியென்றால் நாம் இப்பொழுது செபமாலை செபிப்போம்’ என்றார். அச்சகோதரன், ‘நீங்கள் களைப்பாகத்தானே இருக்கிறீர்கள், ஒருநாள் செபமாலை செபிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்று பதில் கூறினார். அதற்கு லிகோரி, “ஒருநாள் செபமாலை செபிக்காவிட்டால் நான் என் முடிவில்லா மீட்பைப்பெறத் தவறிவிடுவேனோ? என்று அஞ்சுகிறேன்” என்றார்

No comments:

Post a Comment