Thursday 25 January 2018

புனித பவுல் மனமாற்றம்


                சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இன்றும் உயிரோடு வாழ்கிறார். அவரே ஆண்டவர்; மீட்பின், வாழவின் ஊற்று. நேற்றும் இன்றும் நாளையும் மாறதவர். நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்று வாழ்வின் அனுபவம் வழியாக எடுத்துரைத்தவரே புனித பவுல். இவர் சிசிலியா என்ற உரேமை மாநிலத்தின் தலைநகரான தர்சு நகரத்தில் 10ஆம் நூற்றாண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சவுல். செல்வ செழிப்பில் வாழ்ந்தார். யூத குலத்தைச் சேர்ந்தவர். உரோமை குடியுரிமை பெற்று வாழ்ந்தவர். கிரேக்கப் பண்பாட்டிலும், மெய்யியலும் கற்று ஞானியாக வாழ்ந்தார்.

          

         யூதச் சட்டங்களை கற்றுத்தேர்ந்தார். புகழ் பெற்ற கமாலியேல் என்னும் யத ராபியிடம் கல்வி பயின்றார். யூத குலத்தின் முறைகளை நன்கு கற்றிருந்தார். கிறிஸ்தவ மறையை தழுவியவர்களை புறக்கணித்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மெசியா என்று கூறியதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கண்ணில் பட்ட கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தினார். தார்சியுஸ் நகருக்கு கிறிஸ்தவ மக்களை துன்புறுத்த அரசரின் கடிதம் பெற்று செல்லும் வழியில் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவின் சீடராக மாறினார். சவுல் என்ற பெயரை பவுல் என்று மாற்றி கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, கிறிஸ்துவை அறிவித்து, கிறிஸ்துவை வேற்றினத்தாரிடையில் அறிவித்து வேற்றினத்தாரின் திருத்தூதர் என்றும், ஐந்தாம் நற்செய்தியாளர், முதல் இறையியலார், பதின்மூன்றாம் திருத்தூதர் என்றும் அழைக்கப்படுகிறார்

No comments:

Post a Comment