Saturday 27 January 2018

மரியா கடவுளின் அன்னை

       
       புனித அம்புரோஸ், “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்” என்று செபித்தார். யோவான் பெர்க்மான்ஸ்,  “என்னும் நான் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்க்கை வாழ்வேன் என்று நற்கருணை ஆண்டவர் முன்பாக உறுதிமொழி எடுத்தார். அன்னையே உமது அமல உற்பவத்தை நம்புகிறேன். மரியே என்னைக் கைவிடாதேயும்; நான் உம்முடைய மகன்; எனக்கு ஆயிரம் இதயங்கள் இருந்தாலும், அவற்றால் உம்மை நேசிப்பேன்” என்று எழுதி இரத்தத்தால் கையொப்பமிட்டார்.


           புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்” என்றார். புனித கிறிஸ்சோஸ்தம் அருளப்பர், “கடவுளின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக்கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும்” என்று மன்றாடினார்.  

No comments:

Post a Comment