Sunday 28 January 2018

அன்னை மரியாவின் துணை

   
             யூப்ராஸியா,
அன்னை மரியாவின் துணையால் இயேசுவை அளவில்லாமல் அன்பு செய்தார். அன்னை மரியாவைத் தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தார். எல்லா நாள்களும் செபமாலையைப் பக்தியுடன் செபித்தார். அமலோற்ப அன்னை இரவுநேரங்களில் காட்சி கொடுத்து, தனது அன்பை பகிர்ந்து கொடுத்தார். யூப்ராஸியாவும் அன்னை மரியாவிடம் மனம் திறந்து உரையாடினார். அலகையால் துன்புறுத்தப்பட்டத் தருணங்களில் அன்னையின் அருளாசீரால் அலகையை வென்றார்.

         புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, “அம்மா மாமரியே! உம்மில் சரணடைகின்றேன். உமது நினைவுகள் இதயத்திற்கு இன்பம் தருகின்றன. உமது திருமுன்னில் அடியேன் என்னை அர்ப்பணிக்கின்றேன். உமது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காதிருக்க வரம்தாரும்” என்று நாளும் செபித்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கார்மல் அன்னையிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்த காரணத்தினால்தான் இவர் தொடங்கிய துறவற சபைக்கு கார்மல் அன்னையின் பெயரை வைத்தார். அன்னையின் துணையோடு இறையாட்சி பணியைத் திறம்பட செய்தார். குழந்தைப்பருவம் முதல் அன்னை மரியாவிடம், “அம்மா மாமரியே! நான் தூய்மையிலும், ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த முறையில் பணி செய்து, இறைவனை மகிமைப்படுத்த வரம்தாரும்” என்று செபித்தார்.

No comments:

Post a Comment