Wednesday 28 February 2018

புனித இலாரியுஸ்


திருச்சபையை அன்பு செய்து திருச்சபையில் ஒற்றுமை நிலவ அரும்பாடுப்பட்டு உழைத்தவர். கிறிஸ்துவின் அன்பை தனதாக்கி நற்செய்தி அறிவித்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அன்னை மரியாவை துணையாக கொண்டு திருச்சபையை வழிநடதóதியவரே புனித இலாரியுஸ். இவர் சார்தினியா என்ற இடத்தில் பிறந்தார். திருத்தந்தை முதலாம் சிங்கராயருடன் திருத்தொண்டராக பணியாற்றினார்.


            461ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 19ஆம் நாள் திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். இலாரியுஸ்க்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் லியோ, ரோம திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். இலாரியுஸ் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார். திருச்சபையில் 325 ஆண்டு நிகழ்ந்த நீசேயா பொதுச்சங்கம், 431ஆண்டு எபேசு பொதுச்சங்கம், 431ஆண்டு கால்செதோன் பொதுச்சங்கம்,451ஆண்டு திருத்தந்தை லியோ கால்செதோன் பொதுச்சங்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவற்றில் அடங்கியிருந்த போதனைகளை வலியுறுத்தி நிலைநாட்டினார்.

          திருத்தந்தை ரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். புனித யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான புனித யோவானுக்கு அர்ப்பணித்தார். ஒரு துறவற இல்லத்தை நிறுவினார். திருத்தந்தை இலாரியுஸ், 468ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment