Tuesday 20 February 2018

புனித ஜசிந்தா மற்றும் புனித ஃபிரான்சிஸ்கோ



     
         புனித பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா இருவரும் குடும்ப செபத்தில் ஆர்வமுடன் பங்குபெற்றனர். நற்கருணை வழியாக இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு அவரை அன்பு செய்தனர். ஆண்டவருக்கு தங்களை அர்ப்பணம் செய்து ஆராதித்து வந்தனர். ஜசிந்தா, ஃபிரான்சிஸ்கோ போர்ச்சுகீசிய நாட்டில் ஃபாத்திமா எனும் ஊரைச் சேர்ந்தவர்களாவர். ஃபிரான்சிஸ்கோவும் ஜசிந்தாவும், போர்த்துகீசிய கிராமமொன்றின் மிகவும் சாதாரண குடும்பத்தில் "மானுவல்" மற்றும் "ஒலிம்பியா மார்ட்டோ" ஆகியோருக்கு பிறந்தவர்கள். ஜசிந்தா மார்ச் 11, 1910 ஆம் ஆண்டும் ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ : ஜூன் 12, 1908 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள்.
   
        போர்ச்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற நகரில் 1916ஆம் ஆண்டு லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடுமேய்க்கும் சிறுவர்களுக்கு அன்னை மரியா காட்சி அளித்தார். சிறுவர்கள் ஆடுமேய்த்து கொண்டிருந்த தருணத்தில் வானதூதர் ஒருவர் கரங்களில் நற்கருணை ஏந்தியவாறு சிறுவர்களுக்குத் தோன்றினார். வானதூதர் தன்னை “அமைதியின் தூதர்” என்று அறிமுகம் செய்தார். மேலும் “நான் போர்ச்சுக்கல் நாட்டின் காவல்தூதர் நீங்கள் பாவிகளுக்காக செபிக்க வேண்டும்” என்று மூவரிடமும் கேட்டுக்கொண்டார்.


              நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் செபிக்க பின்வரும் செபத்தை மூவருக்கும் கற்றுக்கொடுத்தார். “என் கடவுளே! நான் உம்மை விசுவசிக்கின்றேன். நான் உம்மை ஆராதிக்கின்றேன். நான் உம்மை நம்புகின்றேன், நான் உம்மை அன்பு செய்கின்றேன், உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை அன்பு     செய்யாதவர்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார். மேலும் “இயேசு மற்றும் அன்னை மரியா இவர்களின் இதயங்கள் நம் மன்றாட்டுக்குச் செவி கொடுக்கக் காத்திருக்கின்றன” என்று கூறி வானதூதர் மறைந்தார்.

           
           வானதூதர் மறைந்தவுடன் சிறுவர்கள் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஒரு புதர்ச் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியதைக் கண்டார்கள். அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா காட்சி அளித்தார். லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூவரும் அக்காட்சியைக் கண்டார்கள். அன்னை மரியா அவர்களிடம் “நான் செபமாலையின் அன்னை” என்று அறிமுகம் செய்தார். மூன்று சிறுவர்களிடமும் ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதி அதே இடத்திற்கு வருமாறு மரியா கட்டளையிட்டார்.


          ஜøலை 13ம் தேதி காட்சியளித்த தருணத்தில் நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்து “பாவிகள் மனந்திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.மக்கள் நித்திய நரகத்தில் விழாமல் இருக்க “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பாக உதவிபுரியும்” என்ற செபத்தைச் செபிக்கக் கற்றுக்கொடுத்தார். மூன்று சிறுவர்கள் பார்த்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிகாரிகள், அவர்களைப் பல வழிகளில் விசாரணை செய்தார்கள்.“மக்கள் பலரும் அன்னை தோன்றிய மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறுவர்களிடம் மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது. மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்க வேண்டும்; இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும்” என்று கூறி மறைந்தார்.


No comments:

Post a Comment