Friday 2 February 2018

மரியா விசுவாசிகளின் அரண்

              புனித  எஃபிரேம், “ஓ எம் ஆன்மாவின் நம்பிக்கையே வாழ்க! ஓ கிறிஸ்தவர்களுடைய உறுதியான நிச்சயமான மிட்பே வாழ்க; ஓ பாவிகளின் சகாயமே வாழ்க. விசுவாசிகளின் அரணே கேட்டையே, உலகின் மீட்பே வாழ்க” என்று வாழ்த்த வேண்டுகிறார். புனித அகஸ்டின், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார். 

         புனித ஜெர்மானுஸ், மாமரி நம் நன்மைகளுக்கொல்லாம்பற்று எனவும், நம்மைக் கேடு ஒவ்வொன்றிலிருந்தும் விடுவிக்கிறார்கள் என்பதையும் கண்டு கொண்டு அவர்களை வேண்டுங்கள் என்கிறார். எபேசில் பொதுச்சங்கம், “இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள்; எனவே பேறுபெற்ற கன்னி மரியா உண்மையிலேயே இறைவனின் தாய்; ஏனெனில் அவர் கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடலில் ஈன்றெடுத்தார்.மரியா உண்மையாகவே இறைவனும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்பெறுகிறார்” என்றும் சங்கம் கூறுகிறது.

No comments:

Post a Comment