Monday 26 February 2018

புனித செபாஸ்டியன் டி அபரிஸியோ



     
            செபாஸ்டியன் டி அபரிஸியோ மெக்ஸிகோ நாட்டில் குடியேறி வாழ்ந்த ஒரு ஸ்பேனிஷ் நாட்டவராவார். தமது வாழ்நாள் முழுதும் ஒரு கால்நடை வளர்ப்பு பண்ணைப் பணியாளராகவும் சாலைப் பணியாளராகவும் பணிபுரிந்த இவர், ஸ்பெயின் மெக்சிகோவை வெற்றிகொண்ட பிறகு, இளம் துறவிகள் சபையில் ஒரு குருத்துவம் பெறாத துறவியாக இணைந்தார்.இருபத்தாறு ஆண்டுகள் துறவற சபைக்காக பிச்சை எடுத்தார்.

           ஸ்பெயின் நாட்டின் "ஔரென்ஸ்" என்ற இடத்தில் ஜனவரி 20, 1502 ஆம் அபரிஸியோ பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஜுவான் டி அபரிஸியோ"  ஆகும். தாயார் பெயர் "தெரெசா டெல் ப்ரடோ" ஆகும். இவரது பெற்றோர் மிகவும் பக்தியான ஏழை விவசாயிகளாவர். தமது சிறுவயதிலிருந்தே ஆடு மாடுகளை மேய்க்கும் பணி செய்தார். கல்வி கற்பதற்காக பள்ளிக்கூடம் செல்லாத அபரிஸியோ செபிப்பதற்கு தமது பெற்றோரிடம் கற்றுக்கொண்டார்.

       ஒருமுறை, 1514ல் கொடூரமான பிளேக் நோய் அபரிஸியோவை பீடித்தது. சமூகம் அவரை அங்கிருந்து தனிமைபடுத்தும்படி வற்புறுத்தியது. வேறு வழியற்ற அவரது பெற்றோர் அருகேயிருந்த காட்டில் அவருக்காக மறைவாக ஒரு சிறு குடிலை கட்டி அவரை அங்கே தனிமையில் விட்டுச் சென்றனர். உதவிகளற்ற அபரிஸியோ நோயால் தனிமையில் வாடினார். ஒருநாள் ஒரு பெண் ஓநாய் அங்கே வந்தது. அபரிஸியோ தங்கியிருந்த மறைவிடத்தை கண்டுபிடித்த அது அவரது குடிலுக்குள் தலையை நுழைத்து அவரது நோயால் பாதிக்கப்பட்ட உடலின் ஒரு பாகத்தை முகர்ந்து பார்த்தது. பின்னர் அதைக் கடித்து, நக்கிவிட்டு ஓடிப்போனது. அதன்பின்னர் அபரிஸியோ'வின் நோய் தீர ஆரம்பித்தது.

         அவரது வெளிப்படையான பார்வைக்கு நல்ல தோற்றத்தினால் கவரப்பட்ட பெண்கள் பலரால் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளானார். அதனால் கற்பு நிலை மாறாத வாழ்க்கை வாழ வேண்டுமென்ற அவரது உறுதி நிலைகுலையும் என்பதை உணர்ந்தார். அங்கிருந்து தப்பிச் சென்ற அபரிஸியோ ஸ்பெயின் மக்களுக்கும் உதவ எண்ணினார். அங்கேயே தமது கத்தோலிக்க விசுவாசத்தை ஊக்குவிக்க விரும்பினார். அங்குள்ள கிராம மக்களுக்கு ஏர் உழவும், எருது மற்றும் குதிரை போன்ற கால்நடைகளை பழக்குவதற்கும் கற்று கொடுத்தார்.

       மிகவும் சாதாரண ஆடைகளை உடுத்திய பெரும்பாலான நேரங்களை ஆலயங்களில் செலவிட்டார். யாரோ தம்மை அடிக்கடி அர்ப்பண வாழ்விற்கு அழைப்பதாக உணர்ந்தார். அவர் அடிக்கடி அங்குள்ள பிரான்சிஸ்கன் துறவு மடத்திற்கு சென்றுவர ஆரம்பித்தார். அங்குள்ள ஒருநாள், அவருக்கு பாவமன்னிப்பு வழங்கும் துறவி ஒருவர், அவருக்கு ஓர் ஆலோசனை சொன்னார். அதன்படி, சில வருடங்களுக்கு முன்னர் மெக்ஸிகோவில் நிறுவப்பட்ட துறவு மடத்திற்கு தமது சொத்துக்கள் அத்தனையையும் கொடுத்து விடுவது சேவை செய்து இறந்தார்.

No comments:

Post a Comment