Tuesday 27 February 2018

புனித மரிய பெர்டில்லா பொஸ்கார்டின்

           

      நற்கருணையின் மீது அதிக பக்தியும் பற்றும் கொண்டவர். தனது கன்னிமையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்தவர். மருத்துவ மனையில் தாயன்புடன் இறைபணி செய்தவர். கடமைகளை சரிவர செய்து இறைவனை மாட்சிப்படுத்தியவரே புனித மரிய பெர்டில்லா. இவர் 1888ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்தார். பக்தியும் இறைபற்றும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். தாய்க்கு உதவி செய்த காரணத்தால் பள்ளிக்கூடம் செல்லாதவர்.



         பெர்டில்லா அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வாந்தார். எட்டாம் வயதில் நற்கருணை பெற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டு மரியாளின் சங்கத்தில் இணைந்து அன்னையின் அருளும் ஆசீரும் பெற்றார். 1904ல் "விகென்ஸா" என்னுமிடத்திலுள்ள "திரு இருதயத்தின் மகள்கள்" அமைப்பின் உறுப்பினராக சேர்ந்தார் தமது பெயரை "மரியா பெர்டில்லா" என மாற்றிக்கொண்டார். அங்கே 3ஆண்டுகள் சமயலறையில் வேலை செய்தார்.
       

         பின் மருத்துவமனையின் "டிப்தீரியா" எனப்படும் தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் உள்ள அறையில் பணிபுரிய நியமிக்கப்பட்டார்.மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நோயளிகளையும் அன்புடன் கவனித்த பெர்டில்லா வெகு காலமாக அவரது உடலிலிருந்த கட்டி ஒன்றினால் அவர் மிகவும் வேதனையடைந்தார். அதனை நீக்குவதற்காக அவருக்கு ஒரு அறுவை  சிகிச்சையின்போது மரணமடைந்தார்.


No comments:

Post a Comment