Monday 26 February 2018

புனித பொலிக்கார்ப்

 
        கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டவர். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்தவர். பகைவர்களை மன்னித்து அவர்களின் நலனுக்காக மன்றாடினார். கிறிஸ்துவின் நற்செய்தியை வாழ்வாக்கினார். திருத்தூது யோவானின் அன்பு சீடராக நற்செய்தி அறிவித்தவரே புனித பொலிக்கார்ப். இவர் 59ஆம் ஆண்டு பிறந்தார்.  கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை கிறிஸ்துவின் பிரசன்னமாக வலம் வந்தார். அனைத்து மக்களும் மீட்பு பெற ஆர்வமுடன் உழைத்தார். தன்னை பலியாக கையளிக்க முன்வந்தார்.


         அந்தியோக்கியா நகர் ஆயர் புனித இஞ்ஞாசியார் கொலைக் களத்திற்கு சங்கிலி போட்டு இழுத்துச் செல்லப்பட்ட போது ஸ்மிர்னா நகரில் போலிக்கார்ப் அவரைச் சந்தித்து அவர் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வணக்கத்துடன் முத்தமிட்டார். “அந்தியோக்கியா நகர் திருச்சபையை கவனித்துக் கொள்ளும்” என்று இவரை உருக்கமாக கேட்டுக் கொண்டார் இஞ்ஞாசியார். கொடுங்கோலன் மார்க்கஸ் ஆலியுஸ் ஆட்சியின் 6ம் ஆண்டில் பெரும் வேத கலாபனை தோன்றியது. திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அந்தியோக்கு இஞ்ஞாசியார், “பொலிக்கார்ப், உமது மனம் இறைவனை அடித்தளமாகக் கொண்டு, அசைக்க முடியாத பாறைபோல இருக்கிறது. பரிசேயருக்கு எதிராக இயேசு பதில் கூறியதுபோல இருக்கிறது. தப்பறைக் கொள்கைக்கு எதிராக நீ முழங்கும் முழக்கம்” என்று கூறினார்.
     
         ஒருமுறை காட்சியில் இவருடைய தலையணை எரிவதுபோல கண்டார். “நான் நிச்சயம் உயிரோடு எரிக்கப்பட்டு மறைசாட்சி முடி பெறுவேன்” என்று கூறினார். மார்க்கஸ் ஒளரேலியஸ் பேரரசனின் காலத்தில் கிறிஸ்துவை அறிவித்தக் காரணத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்து, கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவை மறுதலிக்காக பொலிக்கார்ப்பை தீயிலிட்டு கொலை செய்தனர். அவ்வாறு 156ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment