Thursday 22 February 2018

கோர்டோனா நகர் புனித மார்க்கிரேட்


          ஒறுத்தல் செய்து பக்தியும் தூய்மையும் மிகுந்தவர். ஏழை நோயாளர்களுக்கு அன்பின் பணிவிடைகள் செய்தவர். எளிமையை தனது வாழ்வில் பின்பற்றினார். புனித அசிசியாரைப் போல பிச்சை எடுத்து உணவு அருந்தினார். அன்னை மரியாவின் மிது பக்தியும் பற்றும் கொண்டு தோழமை உறவு கொண்டார். அன்னை மரியாவின் அருளால் துணையால் புனிதராக மாறியவர். துறவு வாழ்க்கை வழியாக தவ வாழ்கை மேற்கொண்டவரே புனித மார்க்கிரேட். இவர் 1247ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அழகும் அறிவும் திறமையும் பெற்றவர். இவருக்கு ஏழு வயதாகையில் இவரது தாயார் இறந்துப் போனார். தந்தை மறுமணம் செய்துகொண்டார்.
   


           தனது 17ஆம் வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானர். கணவனாலும், பெற்றோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவனை நோக்கி மன்றாடினார். இறையருளால் வழிநடத்தப்பட்டு கோர்டோனாவில் இருந்த பிரான்சிஸ்கன் துறவியர் இல்லத்திற்குச் சென்று அடைக்கலம் வேண்டினர். தாயையும், மகனையும் ஏற்றுக்கொண்டார்கள். மார்க்கிரேட் கடந்தகாலத்தில் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தினார். 3ஆண்டுகள் நோன்பு இருந்து ஒறுத்தல் செய்தார். தவ ஒறுத்தல்கள் வழியாக தன்னை தூய்மைப்படுத்திய இறைபக்தி மிகுந்த மார்க்கிரேட் புனித பிரான்சிஸின் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார்.


          ஒருமுறை செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் இயேசு அவருக்கு காட்சி கொடுத்து, “ஏழைப் பெண்ணே உனக்கு என்ன வேண்டும்”  என்று கேட்டார். அதற்கு மார்க்கிரேட், “உம்மைத் தவிர வேறு என்ன வேண்டும். நான் வேறு எதையும் விரும்பவோ, தேடவோ இல்லை”  என்றார். செப தப வாழ்க்கையை மேற்கொண்ட மார்க்கிரேட் நோயுற்ற, வீடற்ற மற்றும் ஏழைகளுக்காக அங்கேயே ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். அம்மருத்துவமனையின் செவிலியர்க்காக "மூன்றாம் நிலை சகோதரிகள் சபை" என்ற அமைப்பினை நிறுவினார். அவர், "இரக்கத்தின் அன்னை" என்றொரு சபையையும் நிறுவினார். நோயாளிகளுக்கு சேவை செய்வதிலேயே ஈடுப்பட்ட மார்க்கிரேட்  1297ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22 ம் நாள், மரணமடைந்தார்.


No comments:

Post a Comment