Thursday 22 February 2018

புனிதர் பீட்டர் தமியான்



           

          “எல்லாரும் தங்கள் முன்மாதிரிகையால் மற்றவர்கள் முன் ஒளிர வேண்டும்” என்று கூறியவர். கடவுள் பக்தியும், அறிவும், நற்குணமும் மிகுந்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஏழை எளிய மக்களை அன்பு செய்தவர். ஏழை மக்களின் நண்பராக வாழ்ந்தவர். செபத்திற்கும் தனிகவனம் செலுத்தி தனிப்பட்ட நேரம் ஒதுக்கி செப வாழ்வில் கனவம் செலுத்தியவர். உலக நாட்டங்களை துறந்து கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். விவிலியம் நன்கு கற்று வகுப்புகள் வழியாக பறைசாற்றி வாழ்ந்தவரே புனித பீட்டர் தமியான். இவர் 1007ஆம் ஆண்டு பிறந்தார்.



       

  குழந்தைப்பருவத்தில் தாயிடமிருந்த கிடைக்காத அன்பும் அரவணைப்பும் அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். தம்முடைய சகோதரர்களில் ஒருவரால் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டார். இவர் ஏழைகளின் நண்பனாக இருந்தார்.  உணவு உண்ணுகையில் ஏழைகளுடன் உண்ணுவதையும், அவர்களுக்காக செபிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சொந்த சகோதரர் புறக்கணித்ததால் ரவேன்ன மறைமாவட்டத்தின் குருவாக இருந்த தமது இன்னொரு சகோதரரின் அடைக்கலம் புகுந்தார். அவர் பீட்டர் தமியானை கல்வி கற்க செய்தார். பீட்டர் ஒரு பேராசிரியராக உயர்ந்தார். அவர் மிகவும் ஒழுக்க சீலராக இருந்தார். கடுமையான உழைப்புடன், செபிப்பதற்கென்று பல மணிநேரம் செலவிட்டார்.



         

        ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையில் சேர்ந்து முழுநேர செப வாழ்வில் இணைந்தார். பீட்டர் உறக்கத்தை குறைத்துக் கொண்டு, அதிக நேரம் செபிப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். திருவிவிலியம் படிப்பதில் செலவிட்டார். ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையின் தலைவராக பொறுப்பேற்றார். சபையின் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தினார். துறவு மடங்களை விரிவுநடுத்தினார். ரோமிலுள்ள இரண்டு ஆசிரமங்களுக்கும் அரசு அலுவகங்களுக்குமிடையே இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். பீட்டர் தமியான், திருத்தந்தை ஒன்பதாம் லியோவோடு இணைந்து கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர் ஆவார். 

            

          ஒப்புரவு அருள்சாதனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 1057ஆம் ஆண்டு கர்தினாலராக அருள்பொழிவு பெற்றார். தமது கத்தோலிக்க குருவானர்கள் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க ஊக்குவித்தார். மறைமாவட்ட குருக்கள் ஒன்றாக வாழவும், சொகுசு வாழ்க்கை முறையைக் கண்டித்தார்.தமது எழுத்துக்களில் கோட்பாடுகளைவிட, கதைகள் மற்றும் மேற்கோள்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். அவர் எழுதிய வழிப்பாட்டு அலுவலக சந்தங்கள் லத்தீன் மொழியில் அவரது திறமைக்கு சான்றாகும். பிப்ரவரி 22, 1072 அன்று அவர் உயிர் துறந்தார்.


No comments:

Post a Comment