Friday 9 February 2018

மரியா என்றும் கன்னி

      'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 


          மரியா என்றும் கன்னி என்பது இயேசுவின் தாயான கன்னி மரியாவின் சிறப்பு பெயர்களுள் ஒன்றாகும். "தூய ஆவியின் வல்லமையால் இறை மகனை தம் வயிற்றில் சுமந்த மரியா, இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் கடவுளின் அருளால் கன்னிமை குன்றாமல் பாதுகாக்கப்பட்டார்" .

No comments:

Post a Comment