Monday 19 February 2018

புனித கான்ராட்



       உண்மைக்கு அடிபணிந்து அன்பும் பக்தியும் நிறைந்தவர். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தனது உடமைகளை விற்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். ஆன்மீக காரியங்களில் சிறந்த கவனம் செலுத்தி வாழ்ந்தவரே புனித கான்ராட்.

      கான்ராட் வட இத்தாலியில் உள்ள பியச்சென்சா என்ற இடத்தில் பிறந்தார். இறைபக்தியல் சிறந்து விளங்கினார். வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஒருமுறை வேட்டையாட சென்றபோது ஒரு விலங்கு இவரது குறிக்கு தப்பி புதரில் மறைத்துக்கொண்டது. புதருக்கு தீ மூட்டியபோது அது கொடுந்தீயாய் மாறி காடு முழுவதும் தீக்கிரையானது. இதை சற்றும் எதிர்பாராத கான்ராட் செய்வதறியாமல் நின்றார். இதைப்பார்த்த ஒருவர் அரசரிடம் புகார் செய்தார். அரசன் கைது செய்து சிறையில் அடைத்து மரண தண்டனை விதித்தான்.

             கான்ராட் தனது தவறுகளுக்கு மனம்வருந்தி மன்னிப்பு கேட்டார். தனது சொத்துகளை விற்று கொடுப்பதாக கூறி அவ்வாறே செய்தார். பின் பியச்சென்சாவிற்கு சென்று புனித பிரான்சிஸின் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவு வாழ்கையை ஆரம்பித்தார். 30ஆண்டுகள் செபத்திலும், தவத்திலும் இருந்து இறையருள் பெற்று தூயவராக வாழ்ந்து வந்தார். எண்ணற்ற புதுமைகள் செய்தார். நோயாளிகளை குணப்படுத்தினார். இறைஞானம் பெற்று தூயவராக வாழ்ந்த கான்ராட் 1351ஆம் ஆண்டு  பிப்ரவரி திங்கள் 19ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment