Wednesday 14 February 2018

அன்னையும் செபமாலையும்



         
            புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவைப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்”  என்று கூறியுள்ளார். 1208 ஆம் ஆண்டில் புனித தோமினிக் திருச்சபைக்கு தினமும் செபமாலை செபிக்கும் முறையை முதன முதல் கற்பித்தார். லூர்து நகரிலும், பாத்திமாவிலும் முக்கியமாக செபமாலை செபிப்பதை பரிந்துரைக்கவே அன்னை மரி காட்சிகளும் செய்திகளும அருளினார். 




அன்னைமரி புனித தோமினிக்கிடம் “செபமாலை உத்தரியம் இவைகளைக் கொண்டு நான் ஒருநாள் உலகைக் காப்பாற்றுவேன்” என்று வாக்களித்தார். அன்னைமரி புனித தோமினிக்கிடமும், முக்தி ஆலனிடமும் “தேவ இரகசியங்களை தியானத்துப் பக்தி உருக்கத்துடன் செபமாலை செபிப்பவர் துர்பாக்கியத்தால் மேற்கொள்ளப்படமாட்டார். இறைவன் அவரை தண்டிக்கமாட்டார். அகால மரணத்திற்கு ஆளாகமாட்டார். அருள் நிலையில் வாழ்ந்;து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவார்” என்று வாக்களித்திருக்கிறார். இறைவனின் சினத்தைத் தணித்து இரக்கத்தை பெற்று கொள்ள செபமாலை ஒன்றே வழி.
  



        ரயிலில் நான்கு நண்பர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு ஸ்டே~னில் ஒரு வயதான பெரியவர் ஏறினார். நான்கு நண்பர்கள் இருந்த பெட்டியில் அமர்ந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த பெரியவர் செபமாலையை எடுத்து செபிக்க ஆரம்பித்தார். இதைக்கண்ட இளைஞர்கள் ‘இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு ஆசாமியா?’ என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த பெரியவரிடம் “பெரியவரே! காலம் மாறிப் போச்சு! இது அறிவியல் காலம். கடவுளால் முடியாததுகூட மனுசன் செய்றான். இப்படிப்போய் நீங்க அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம, சும்மா செபமாலை சொல்றீங்களே! உங்க அட்ரசை கொடுங்க. நாங்க நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு புத்தகமெல்லாம் அனுப்பி வைக்கிறோம்” னு சொல்லி அந்த பெரியவரை கேலி பண்ணுனாங்க. அந்த பெரியவர் தனது முகவரி அட்டையை எடுத்துக் கொடுத்தார். அதைப்படித்து பார்த்த இளைஞர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். “டாக்டர் லூயி பாஸ்டர், அறிவியல் ஆய்வு மையம், பாரீஸ்” னு எழுதியிருந்தது. இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.


No comments:

Post a Comment