Wednesday 14 February 2018

புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ்

புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இரு சகோதரர்களும் "பைஸான்தீனிய"  நாட்டின் கிறிஸ்தவ இறையியலாளர்களும், மறை பரப்பாளர்களுமாவர். தற்போதைய கிரேக்க நாடான "பைஸான்தீனிய" நாட்டில் சிரில் 826 அல்லது 827, ஆம் ஆண்டும் மெதோடியஸ் : 815 ஆம் ஆண்டும் பிறந்த இவர்களிருவரினதும் தந்தை பெயர் "லியோ" ஆகும். "மரியா" இவர்களது தாயார் ஆவார். சிரிலின் இயற்பெயர் "காண்ஸ்டன்டைன்" ஆகும். இவர் தமது மரணத்தின் சிறிது காலத்தின் முன்னே ரோம் நகரில் துறவறம் பெற்றபோது சிரில் என்னும் மதப் பெயரை ஏற்றுக்கொண்டார்.
     
          சிரிலுக்கு பதினான்கு வயது நடக்கையில் அவர்களது தந்தையார் மரணமடைந்தார். அந்நிலையில், பேரரசின் முதலமைச்சர்களுள் ஒருவராயிருந்த "தியோக்டிஸ்டோஸ்" என்பவர் அவர்களின் பாதுகாவலரானார். அவரே அவர்களது கல்விக்கும் உதவி புரிந்தார். சிரில் தமக்கு கிடைத்த ஆளுநர் பதவியை புறக்கணித்தார். ஆனால் அதே வேளையில் அவரது சகோதரரான மெதோடியஸ் "ஸ்லாவிக்" மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.


          சிரில் ஒரு துறவு மடத்தில் இணைந்தார். அவரது சகோதரர் மெதோடியஸ் சிறிது காலம் அரசு பதவியில் பணியாற்றிய பிறகு துறவு மடத்தில் இணைந்தார். சிரிலுடைய முதல் பணி, கிழக்கு விதிமுறைகள் அமலிலிருந்த அப்பிராந்தியத்தில் ஒரு புதிய எழுத்துக்களை கண்டுபிடித்தலாயிருந்தது. பின்னர், அவருடைய சீடர்கள் சிரில்லிக் எழுத்துக்களை உருவாக்கினர். பவுல் எழுதிய கடிதங்கள் மற்றும் வழிபாட்டு புத்தகங்கள் ஆகியனவற்றை இணைந்து "ஸ்லாவோனிக்" மொழியில் மொழிமாற்றம் செய்தனர்.

          மெதோடியஸ் ஸ்லாவிக் மக்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக செயல்பட்டார்.  மெதோடியஸ் ஜுர வேகத்தில், எட்டே மாத காலத்தில் மொத்த திருவிவிலியத்தையும் "ஸ்லாவோனிக்"  மொழியில் மொழிபெயர்த்தார். 885ம் ஆண்டின்  ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளின் ஒன்றிப்பிற்காக சிறப்பாக பணியாற்றியிருந்தனர். 1980ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்  இச்சகோதரர்களை ஐரோப்பிய நாடுகளின்இணை பாதுகாவலர்களாக நியமித்தார். இவரின் நினைவுத் திருநாள் பெப்ரவரி 14 ஆகும். 


No comments:

Post a Comment