Monday 26 February 2018

புனித அடேலா

       
       அடேலா, லத்தீன் அறிவைக் கொண்ட ஒரு சிறந்த கல்வியாளரும், சுறுசுறுப்பும், வீரமும் கொண்டவர்.சுமார் 1083ம் ஆண்டு, அடேலா, தமது பதினைந்தாவது வயதில், பிலாயிஸ் கோமகனின் மகனான “ஸ்டீஃபன் ஹென்றியை” திருமணம் செய்துகொண்டார். இவர் 1067 ஆண்டு பிறந்தார். இங்கிலாந்து நாட்டின் முதல் நார்மன் அரசனான வில்லியமின் மகளாவார். இங்கிலாந்து நாட்டின் அரசியான “மெட்டில்டா” இவரது தாயார். அடேலா, இங்கிலாந்தின் அரசனான ஃபிரான்ஸ் நாட்டின் “இரண்டாம் ஸ்டீஃபனின்” மனைவியுமாவார். தமது கணவர் இல்லாத காலத்தில், “பிலாயிஸ்” நகரின் அரசாட்சிப் பிரதிநிதியுமாவார். வயது வராத தமது மகனுக்குப் பதிலாக அரசாட்சிப் பிரதிநிதியாக ஆண்டார்.


        ஸ்டீஃபன் ஹென்றி, 1096ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவருடன் இணைந்து  “புனித பூமியை” மீட்பதற்காக முதலாம் சிலுவைப் போரில் பங்குகொண்டார். அடேலாவுக்கு ஸ்டீபன் எழுதிய கடிதங்களில் சிலுவைப் போரின் தலைவர்களின் அனுபவங்களையும் வெளிப்படுத்தினார். முதலாம் சிலுவைப் போரின் போது தமது கணவர் நாட்டிலில்லாத காலங்களில் சிறப்பாக ஆட்சிப் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு துறவியருக்கு அனுமதியளித்தார்.


        கணவர் இல்லாத காலங்களில் அடேலா நாடு முழுதும் பயணித்தார். பிரச்சனைகளை தீர்த்துவைத்தார். பொருளாதார வளர்ச்சிகளை ஊக்குவித்தார். அரசருடன் இணைந்து போருக்குச் செல்லுமாறு வீரர்களை தூண்டினார்.1100ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாடு திரும்பிய ஸ்டீஃபன், 1101ம் ஆண்டு இரண்டாம் சிலுவைப் போரில் கலந்துகொண்டார். இறுதியில், 1102ம் ஆண்டு, எகிப்து நாட்டின் “ஃபடிமிட் கலிபேட்” என்பவருடன் நடந்த “ரம்லா போரில்” பொறுப்பேற்றிருந்த ஸ்டீஃபன், நோய்வாய்ப்பட்டு மரித்துப் போனார்.கணவரின் மரணத்தின் பின்னர், வயதுக்கு வராத மகன் “திபௌட்”  ஆட்சி பொறுப்பேற்கும் வரை அடேலா நாட்டை ஆண்டார். மகன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஆட்சியில் வழிகாட்டினார். பக்தியுள்ள அடேலா  கடவுளின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டார். மடாலயங்களையும் சிற்றாலயங்களையும் கட்ட நிதியுதவி செய்த வாழ்ந்த அடேலா, 1137ம் ஆண்டு, “மார்சிக்னியில்”  இறந்த்தார்.

No comments:

Post a Comment