Wednesday 14 February 2018

புனித க்ளாத்தெ லா கொலம்பியர்

   
   
என் ஆன்மாவே நீ ஏன் உனது அன்பர் ஆண்டவரோடு நெருங்கி உறவாடத் தயங்குகின்றாய்? ஆண்டவர் உன்னோடு இருப்பதே உனக்கு நலமானது என்று கூறியவர். இயேசுவின் சிலுவைப் பாடுகளில் முழுமையாகப் பங்கு சேர்ந்தவரே புனித க்ளாத்தெ லா கொலம்பியர். இவர் பிரான்ஸ் நாட்டில் 1641ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் பிறந்தார். பெற்றோரின் முன்மாதிரியான வாழ்க்கையால் நற்பண்பில் வளர்ந்து வந்தார். தனது ஒன்பதாம் வயதில் திருமறை வழக்கப்படி நற்கருணையும், உறுதிப்பூசுதலும் பெற்றுக்கெண்டார்.
 

     க்ளாத்தெ லா கொலம்பியர் பெற்றோரின் அனுமதியும் ஆசீரும் துறவற வார்த்தைப்பாடுகளான கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வழியாக  இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தனது முதல் நன்றித் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில், மூவுலகாளும் இறைவனின் திருமகனாம் இயேசு, மனிதராய்ப் பிறந்து, தமது திருவுடலையும் திரு இரத்தத்தையும் பலியாகவும், திருவிருந்தாகவும் ஏற்படுத்தினார். இரத்தம் சிந்தாத வகையில் இயேசுவின் திருவுடலையும், திருஇரத்தத்தையும் கொண்ட திருக்கிண்ணத்தை ஏந்தும் ஒரு குருவானவரின் கரங்கள் எத்துணைப் பேறுபெற்றவை.” என்று கூறினார்.


  இறைவனின் அருளால் முழுநேர மறையுரையாளராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் செயல்பட்டார். நற்செய்தியின் மதிப்பீடுகளை நாளும் உள்வாங்கினார். இறையியலில் கருத்தாழமிக்கக் கருத்துக்களை மறையுரை வழியாக எடுத்துரைத்தார். நற்செய்தியை மக்களுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கூறினார். பற்பல பணிகள் வழியாக அனைவரின் உள்ளங்களையும் இறைவன்பால் வசீகரித்தார். சிலருடைய பொய்யானக் குற்றச்சாட்டினால், க்ளாத்தெ லா கொலம்பியரை அநீதியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். எல்லாவற்றிற்கும் அமைதியாக அன்புடனும், பொறுமையுடனும், அறிவுப்பூர்வமாகவும் கொலம்பியர் பதில் அளித்தார். அவர் நிரபராதி என்பது தெள்ளத் தெளிவாயிற்று. இதயம் இறையன்பால் நிறைந்தது. முகமோ இறைபிரசன்னத்தைப் பிரதிபலித்தது. பல ஆண்டுகள் இயேசு சபையில் புனிதமான குருத்துவப் பணியைச் செம்மையாகச் செய்து. இயேசுவின் குரலைக் கேட்டவரே க்ளாத்தெ லா கொலம்பியர். இவர் 1682, பிப்ரவரி 15ஆம் நாள்விணணகம் சேர்ந்தார்



No comments:

Post a Comment