Thursday 1 March 2018

புனித டேவிட்


         வானதூதரின் துணையை பெற்றவர். திருசிலுவையை புகலிடமாக நாடியவர். கிறிஸ்துவினோடு கொண்ட உறவால் அன்பின் சுடர் வீசியவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அன்னை மரியாவின் துணையால் நன்மைகள் செய்தவரே புனித டேவிட். இவர் 500ஆம் ஆண்டு கெரேசிகாவின் இளவரசரின் மகனாக பிறந்தவர். வானதூதரின் வழிகாட்டுதல் பெற்றவர்.

       டேவிடட் புனித பவுலினசிடம் 10ஆண்டும் திருமறை கல்வி கற்றுக்கொண்டார். திருசிலுவையை அன்பு செய்தார். வானதூதரின் அறிவுரைபடி பிரிட்டிஷ் பகுதிக்கு மறைபணி செய்ய சென்றார். குருவாக அருள்பொழிவு பெற்று நற்செய்தியை நற்சான்றுகள் வழியாக அறிவித்தார். திருச்சபையின் ஒழுங்குமுறைகளை பின்பற்றினார். துறவு இல்லங்களை ஏற்படுத்தினார். துறவிகளுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தார். 
        டேவிட் தன்னுடன் வாழ்ந்த துறவிகளை அன்பு செய்தார். நன்னைகள் செய்து நல்வழி காட்டினார். அவர் மீது பொறாமை கொண்ட துறவி ஒருவர் உணவில் விஷம் கலந்து கொடுத்தார். உணவின்மீது சிலுவை அடையாளம் வரைந்து சாப்பிட்ட காரணத்தால் யாதொரு ஆபத்தும் இன்றி உயிர் தப்பினார். எருசலேமிற்கு திருபயணம் மேற்கொண்ட டேவிட், திருத்தந்தையால் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

          பெலாஜிய தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். இறந்த விதவையின் மகனுக்கு உயிர் கொடுத்தார். மாலை நேரங்களில் இறைவனோடு உறையாடினார். நல்ல நூல்களை வாசிப்பதில் ஆர்வம் செலுத்தினார். எண்ணற்ற நூல்கள் எழுதினார். இறைவார்த்தையை வாழ்வாக்கினார். அன்னை மரியாவை வாழ்வின் துணையாக தேர்ந்தெடுத்தார். தனது திறமையான பேச்சற்றலால் சமூகத்தில் நிலவிய தீமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த டேவிட் இறந்தார்.

No comments:

Post a Comment