Sunday 18 March 2018

புனித ஹெரிபெர்ட்


        ஆலயம் ஆர்வமாய் சென்றவர். கடவுள் திருமுன்னால் மாசற்றவராய் வாழ்ந்தவர்.  நற்செயல்கள் வழியாக நன்மைகள் செய்தவ வாழ்ந்தவரே புனிக ஹெரிபெர்ட். இவர் 970ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். தினந்தோறும் ஆர்வமுடன் ஆலயம் சென்று செபித்தார். ஆசீர்வாதப்பர் இல்லத் துறவிகளிடம் சென்று எழுத படிக்க கற்றுக்கொண்டார். துறவிகளின் வழிகாட்டுதலால் நற்பண்பில் வளர்ந்து வந்தார். 


      வாம்ஸ் நகரில் ஆலயத்தின் முக்கிய பொறுப்புகள் ஏற்று சிறப்புடன் செயல்பட்டார். இறைவனுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்து 994ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பேரரசர் ஓத்தோ ஹெரிபெட்டை ஆவணக் காப்பாளராக நியமித்தார். உயர் பதவி வைகித்தபோதும் நேர்மையுட் செய்பட்டு பேரரசரின் மனம் கவர்ந்தார். தன்னம் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்தார்.


      1003ஆம் துறவு இல்லம் எழுப்பினார். உத்தம துறவியாக வாழ்ந்து இறையாட்சி பணி செய்தார். இறைவேண்டுதலால் மக்களின் தேவைகளை உணர்ந்து உதவி செய்தார். நீர்  இல்லாமல் துன்புற்ற மக்களுக்கு தனது வேண்டுதலால் மழையை பெற்ற தந்தார். மக்களின் தேவையை நிறைவேற்றினார். இறைவனோடு உறவு கொண்டு நன்மைகள் செய்த ஹெரிபெர்ட் 1021ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment