Wednesday 7 March 2018

புனித பெர்ப்பெத்துவா

            இறைவனின் இறையருளால் வாழ்ந்தவர். விசுவாசத்தில் ஊன்றி நில்லுங்கள்; ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்று கூறி அயலானை அன்பு செய்தவர். கிறிஸ்துவின் வல்லமையால் நாளும் வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தினர். இவரது தந்தை கிறிஸ்துவை மறுதலிக்க கூறினார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட பெர்ப்பெத்துவா திருமுழுக்கு பெற்றார். 


      இளம்பருவத்தில் பெர்ப்பெத்துவ திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தயானார். கிறஸ்துவை ஏற்றுக்கொண்ட காரணத்தால் பெர்ப்பெத்துவா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறை கற்றோட்டம் இல்லாத இடம். சிறையில் இட நெருக்கடி அதிகம். கிறிஸ்தவ மக்கள் சிறையில் துன்புற்றனர். சிறையிலுள்ள கிறிஸ்தவ மக்களை பார்க் வந்த திருத்தொண்டரின் வழிகாட்டுதலால் பெர்ப்பெத்துவா தனது குழந்தையை சிûறியல் வைத்துகொள்ள அனுமதி பெற்றார். 


         பெர்ப்பெத்துவா தனது குழந்தையைப் பார்த்துஎனது சிறை எனக்கு அரண்மனை போலானது என்றார். விசாரணையின் போது தந்தையின் பரிந்துரையால் கிறிஸ்துவை மறுதலிக் கூறினார். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த பெர்பெத்துவ விலங்குகளுக்கு உணவாக கையளிக்க நீதிபதி தீர்ப்பளித்தார். சிறையில் துன்பங்களின் மத்தியில் இறைவனோடு செபித்து ஆற்றல் பெற்றார். பெர்ப்பெத்துவ கிறிஸ்தவர் என்பதற்காக விலங்குகளுக்கு உணவாக மாறினார்.


No comments:

Post a Comment