Monday 12 March 2018

புனித யூலோஜியஸ்



       இறைவனின் திருவுளம் ஆர்வமுடன் தேடியவர். கல்வி கற்பதில் சிறந்து விளங்கியவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர். இறைவல்லமையால் வழிநடத்தப்பட்டவர். அன்மை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அன்னை அருளால் செல்வங்களை விற்று ஏழைகளுக்கு பகர்ந்தவரே புனித யூலோஜியஸ். இவர் ஸ்பெயின் நாட்டில் 819ஆம் ஆண்டு பிறந்தார்.


         யூலோஜியஸ் தாயின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். சிறந்த முறையில் இஸ்பரைன்தேயோ என்ற துறவியின் வழிகாட்டுதலால் தூய்மையில் வளர்ந்து குருவாக அருள்பொழிவு பெற்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நேரிய பாதையில் வழிநடத்தினார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தப்பட்ட காலம். இவர் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்தில் பல துன்பங்களைச் சந்தித்தார். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார்.

         கிறிஸ்துவை நற்செயல்கள் வழியாக பறைசாற்றினார். கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளை நூல்கள் வழியாக எடுத்துரைத்தார். கிறிஸ்துவை அரசராக ஏற்று விசுவாசத்தில் வாழ்ந்த மக்கள் துன்புற்ற வேளையில் தைரியம் பகர்ந்து கொடுத்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்று கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். அன்னை மரியாவிடம் தனது துன்பங்களை பகர்ந்து கொண்டார். யூலோஜியஸ் பேராயராக அருள்பொழிவு பெற்றுக்கொள்ள சென்ற தருணத்தில் அவரை கைது செய்ரு துன்புறுத்தி 859ஆம் மார்ச்சி திங்கள் 11ஆம் கொலை செய்தார்கள்.


No comments:

Post a Comment