மரியா திருக்குடும்பத்தின் தலைவி
இயேசுவுக்கு பன்னிரண்டு வயது நடந்தபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். அப்போது இயேசு ஆலயத்தி லேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து தேடினர். இறுதியாக, இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைமகனாக இயேசுவை ஆலயத்தில் கண்டனர். பின்னர் அவர்களோடு நாசரேத் திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். அவர் யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். திருக்குடும்பத்தின் தலைவியான மரியா யோசேப்புக்கு நல்ல மனைவியாகவும், இயேசுவுக்கு நல்ல தாயாகவும் சிறந்து விளங்கினார்.
No comments:
Post a Comment