Sunday 4 March 2018

மரியா கிறிஸ்தவர்களின் தாய்

     "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்ற இறைவாக்கினர் சிமியோனின் வார்த்தைகள் நிறைவேறும் வகையில், இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற அவரை, "இதோ உன் தாய்" என்ற வார்த்தைகள் மூலம் இயேசு தனது சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். 
   

        இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர் கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதல்படியே வாழ்ந்து வந்தனர். அன்னை மரியாவோடு வேண்டுதல் செய்து கொண்டிருந்த போதுதான், திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்தார். அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் யோவானின் பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.

No comments:

Post a Comment